நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்

புறநானூறு

நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்
இளையன் இவன் என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும் தேரும் மாவும்
படைஅமை மறவரும் உடையும் யாம் என்று
உறுதுப்பு அஞ்சாது உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின் பொருந்திய
என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது
கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என் நிலவரை
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே

நெடுஞ்செழியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து

Next Post

மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி

Related Posts

வாள் வலந்தர மறுப் பட்டன

புறநானூறு வாள்வலந்தர மறுப் பட்டனசெவ் வானத்து வனப்புப் போன்றனதாள் களங்கொளக் கழல் பறைந்தனகொல் ஏற்றின் மருப்புப் போன்றனதோல் துவைத்து அம்பின் துனைதோன்றுவநிலைக்கு ஒராஅ இலக்கம்…
Read More

அடிபுனை தொடுகழல் மையணல் காளைக்குஎன்

புறநானூறு அடிபுனை தொடுகழல் மையணல் காளைக்குஎன்தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலேஅடுதோள் முயங்கல் அவைநா ணுவலேஎன்போற் பெருவிதுப் புறுக என்றும்ஒருபால் படாஅது ஆகிஇருபாற் பட்ட இம்…
Read More

கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்

புறநானூறு கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்மலங்கு மிளிர் செறுவின் தளம்புதடிந் திட்டபழன வாளைப் பரூஉக்கண் துணியல்புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆகவிலாப்…
Read More