நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்

புறநானூறு

நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்
இளையன் இவன் என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும் தேரும் மாவும்
படைஅமை மறவரும் உடையும் யாம் என்று
உறுதுப்பு அஞ்சாது உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின் பொருந்திய
என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது
கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என் நிலவரை
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே

நெடுஞ்செழியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து

Next Post

மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி

Related Posts

வருதார் தாங்கி அமர்மிகல் யாவது

புறநானூறு வருதார் தாங்கி அமர்மிகல் யாவதுபொருது ஆண்டொழிந்த மைந்தர் புண்தொட்டுக்குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டிநிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப்பருந்து அருந்துற்ற…
Read More

அன்னச் சேவல் அன்னச் சேவல்

புறநானூறு அன்னச் சேவல் அன்னச் சேவல்ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்மையல் மாலை யாம் கையறுபு…
Read More
Exit mobile version