போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்

புறநானூறு

போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்
ஊனுற மூழ்கி உருவிழந் தனவே
வேலே குறும்படைந்த அரண் கடந்தவர்
நறுங் கள்ளின் நாடு நைத்தலின்
சுரை தழீஇய இருங் காழொடு
மடை கலங்கி நிலைதிரிந் தனவே
களிறே எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து அவர்
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின்
பரூஉப் பிணிய தொடிகழிந் தனவே
மாவே பரந்தொருங்கு மலைந்த மறவர்
பொலம் பைந்தார் கெடப் பரிதலின்
களன் உழந்து அசைஇய மறுக்குளம் பினவே
அவன் தானும் நிலம் திரைக்கும் கடல் தானைப்
பொலந் தும்பைக் கழல் பாண்டில்
கணை பொருத துளைத்தோ லன்னே
ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடந்தாள்
பிணிக் கதிர் நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்குஉரித்து ஆகல் வேண்டின் சென்றவற்கு
இறுக்கல் வேண்டும் திறையே மறிப்பின்
ஒல்வான் அல்லன் வெல்போ ரான் எனச்
சொல்லவும் தேறீர் ஆயின் மெல்லியல்
கழற் கனி வகுத்த துணைச் சில் ஓதிக்
குறுந்தொடி மகளிர் தோள்விடல்
இறும்பூது அன்று அஃது அறிந்துஆ டுமினே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்

Next Post

முனைத் தெவ்வர் முரண் அவியப்

Related Posts

சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்

புறநானூறு சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்கட்டில் நிணக்கும் இழிசினன் கையதுபோழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோஊர்கொள வந்த பொருநனொடுஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே…
Read More

வரை புரையும் மழகளிற்றின் மிசை

புறநானூறு வரை புரையும் மழகளிற்றின் மிசைவான் துடைக்கும் வகைய போலவிரவு உருவின கொடி நுடங்கும்வியன் தானை விறல் வேந்தேநீ உடன்று நோக்கும்வாய் எரிதவழநீ நயந்து…
Read More

இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்

புறநானூறு இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்துமன்உயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும்நின்னொடு தூக்கிய வென்வேற் செழியஇரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டியபெருங்கல் அடாரும்…
Read More