போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்

புறநானூறு

போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்
ஊனுற மூழ்கி உருவிழந் தனவே
வேலே குறும்படைந்த அரண் கடந்தவர்
நறுங் கள்ளின் நாடு நைத்தலின்
சுரை தழீஇய இருங் காழொடு
மடை கலங்கி நிலைதிரிந் தனவே
களிறே எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து அவர்
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின்
பரூஉப் பிணிய தொடிகழிந் தனவே
மாவே பரந்தொருங்கு மலைந்த மறவர்
பொலம் பைந்தார் கெடப் பரிதலின்
களன் உழந்து அசைஇய மறுக்குளம் பினவே
அவன் தானும் நிலம் திரைக்கும் கடல் தானைப்
பொலந் தும்பைக் கழல் பாண்டில்
கணை பொருத துளைத்தோ லன்னே
ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடந்தாள்
பிணிக் கதிர் நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்குஉரித்து ஆகல் வேண்டின் சென்றவற்கு
இறுக்கல் வேண்டும் திறையே மறிப்பின்
ஒல்வான் அல்லன் வெல்போ ரான் எனச்
சொல்லவும் தேறீர் ஆயின் மெல்லியல்
கழற் கனி வகுத்த துணைச் சில் ஓதிக்
குறுந்தொடி மகளிர் தோள்விடல்
இறும்பூது அன்று அஃது அறிந்துஆ டுமினே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்

Next Post

முனைத் தெவ்வர் முரண் அவியப்

Related Posts

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

புறநானூறு குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்ஆள் அன்று என்று வாளின் தப்பார்தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇயகேளல் கேளிர் வேளாண் சிறுபதம்மதுகை இன்றி வயிற்றுத் தீத்…
Read More

வினை மாட்சிய விரை புரவியடு

புறநானூறு வினை மாட்சிய விரை புரவியடுமழை யுருவின தோல் பரப்பிமுனை முருங்கத் தலைச்சென்று அவர்விளை வயல் கவர்பு ஊட்டிமனை மரம் விறகு ஆகக்கடி துறைநீர்க்…
Read More

ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்

புறநானூறு ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்யானையும் மலையின் தோன்றும் பெரும நின்தானையும் கடலென முழங்கும் கூர்நுனைவேலும் மின்னின் விளங்கும் உலகத்துஅரைசுதலை பனிக்கும்…
Read More