அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்

புறநானூறு

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்
திரண்டுநீடு தடக்கை என்னை இளையோற்கு
இரண்டு எழுந் தனவால் பகையே ஒன்றே
பூப்போல் உண்கண் பசந்து தோள் நுணுகி
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று ஒன்றே
விழவு இன்று ஆயினும் படு பதம் பிழை யாது
மைஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர்க்
கைமான் கொள்ளு மோ என
உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

Next Post

போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்

Related Posts

சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்

புறநானூறு சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்னவேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்துவீற்றிருந் தோரை எண்ணுங் காலைஉரையும்…
Read More

இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்

புறநானூறு இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்மடவரல் உண்கண் வாள்நதல் விறலிபொருநரும் உளரோ நும் அகன்றலை நாட்டு எனவினவல் ஆனாப் பொருபடை வேந்தேஎறிகோல் அஞ்சா…
Read More

சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்

புறநானூறு சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்கட்டில் நிணக்கும் இழிசினன் கையதுபோழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோஊர்கொள வந்த பொருநனொடுஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே…
Read More