முனைத் தெவ்வர் முரண் அவியப்

புறநானூறு

முனைத் தெவ்வர் முரண் அவியப்
பொர்க் குறுகிய நுதி மருப்பின் நின்
இனக் களிறு செலக் கண்டவர்
மதிற் கதவம் எழுச் செல்லவும்
பிணன் அழுங்கக் களன் உழக்கிச்
செலவு அசைஇய மறுக் குளம்பின் நின்
இன நன்மாச் செயக் கண்டவர்
கவை முள்ளின் புழை யடைப்பவும்
மார்புறச் சேர்ந்து ஒல்காத்
தோல் செறிப்பில் நின்வேல் கண்டவர்
தோள் கழியடு பிடி செறிப்பவும்
வாள் வாய்த்த வடுப் பரந்த நின்
மற மைந்தர் மைந்து கண்டவர்
புண்படு குருதி அம்பு ஒடுக்கவும்
நீயே ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும்
சுற்றத்து அனையை ஆகலின்போற்றார்
இரங்க விளிவது கொல்லோ வரம்பு அணைந்து
இறங்குகதிர் அலம்வரு கழனிப்
பெரும்புனல் படப்பை அவர் அகன்றலை நாடே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்

Next Post

அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்

Related Posts

வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்

புறநானூறு வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்துஅளைச்செறி உழுவை இரைக்குவந் தன்னமலைப்பரும் அகலம் மதியார் சிலைத்தெழுந்துவிழுமியம் பெரியம் யாமே நம்மிற்பொருநனும்…
Read More

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

புறநானூறு நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவைகடவுள் பேணேம் என்னா ஆங்குமடவர் மெல்லியர் செல்லினும்கடவன் பாரி கை வண்மையே கபிலர்
Read More