போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்

புறநானூறு

போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்
ஊனுற மூழ்கி உருவிழந் தனவே
வேலே குறும்படைந்த அரண் கடந்தவர்
நறுங் கள்ளின் நாடு நைத்தலின்
சுரை தழீஇய இருங் காழொடு
மடை கலங்கி நிலைதிரிந் தனவே
களிறே எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து அவர்
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின்
பரூஉப் பிணிய தொடிகழிந் தனவே
மாவே பரந்தொருங்கு மலைந்த மறவர்
பொலம் பைந்தார் கெடப் பரிதலின்
களன் உழந்து அசைஇய மறுக்குளம் பினவே
அவன் தானும் நிலம் திரைக்கும் கடல் தானைப்
பொலந் தும்பைக் கழல் பாண்டில்
கணை பொருத துளைத்தோ லன்னே
ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடந்தாள்
பிணிக் கதிர் நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்குஉரித்து ஆகல் வேண்டின் சென்றவற்கு
இறுக்கல் வேண்டும் திறையே மறிப்பின்
ஒல்வான் அல்லன் வெல்போ ரான் எனச்
சொல்லவும் தேறீர் ஆயின் மெல்லியல்
கழற் கனி வகுத்த துணைச் சில் ஓதிக்
குறுந்தொடி மகளிர் தோள்விடல்
இறும்பூது அன்று அஃது அறிந்துஆ டுமினே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்

Next Post

முனைத் தெவ்வர் முரண் அவியப்

Related Posts

அன்ன வாக நின் அருங்கல வெறுக்கை

புறநானூறு அன்ன வாக நின் அருங்கல வெறுக்கைஅவை பெறல் வேண்டேம் அடுபோர்ப் பேகசீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்புலநன்னாடு பாட என்னை நயந்துபரிசில் நல்குவை…
Read More

கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்

புறநானூறு கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்நெருநல் உண்டனம் என்னாது பின்னும்செலவுஆ னாவே கலிகொள் புள்ளினம்அனையர் வாழியோ இரவலர் அவரைப்புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்உடைமை ஆகும்…
Read More

பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே

புறநானூறு பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னேஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனேஅறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னேதிறவோர் புகழ்ந்த தின்நண் பினனேமகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்துதுகளறு கேள்வி…
Read More
Exit mobile version