இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்

புறநானூறு

இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
மன்உயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும்
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய
இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய
பெருங்கல் அடாரும் போன்ம் என விரும்பி
முயங்கினேன் அல்லனோ யானே மயங்கிக்
குன்றத்து இறுத்த குரீஇஇனம் போல
அம்புசென்று இறுத்த அறும்புண் யானைத்
தூம்புஉடைத் தடக்கை வாயடு துமிந்து
நாஞ்சில் ஒப்ப நிலமிசைப் புரள
எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர்
எந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப்புதல்வர்
இன்ன விறலும் உளகொல் நமக்கு என
மூதில் பெண்டிர் கசிந்து அழ நாணிக்
கூற்றுக்கண் ஓடிய வெருவரு பறந்தலை
எழுவர் நல்வலங் கடந்தோய் நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே

குடபுலவியனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்

Next Post

இரு முந்நீர்க் குட்டமும்

Related Posts

முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்

புறநானூறு முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்பரந்து பட்ட வியன் ஞாலம்தாளின் தந்து தம்புகழ் நிறீஇஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇயபெருமைத்து ஆக…
Read More

இவர் யார் என்குவை ஆயின் இவரே

புறநானூறு இவர் யார் என்குவை ஆயின் இவரேஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசைபடுமணி யானைப்பறம்பின் கோமான்நெடுமாப் பாரி மகளிர் யானேதந்தை தோழன்…
Read More

இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்

புறநானூறு இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்மடவரல் உண்கண் வாள்நதல் விறலிபொருநரும் உளரோ நும் அகன்றலை நாட்டு எனவினவல் ஆனாப் பொருபடை வேந்தேஎறிகோல் அஞ்சா…
Read More