ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ

புறநானூறு

ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கு மொருகண் போல
வேந்துமேம் பட்ட பூந்தார் மாற
கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன்மறவரும் என
நான்குடன் மாண்ட தாயினு மாண்ட
அறநெறி முதற்றே யரசின் கொற்றம்
அதனால், நமரெனக் கோல்கோடாது
பிறரெனக் குணங்கொல்லாது
ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையும்
திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்
வானத் தன்ன வண்மையு மூன்றும்
உடையை யாகி யில்லோர் கையற
நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்
வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
நெடுவே ணிலைஇய காமர் வியன்றுறைக்
டுவளி தொகுப்ப வீண்டிய
வடுவா ழெக்கர் மணலினும் பலவே

மருதனிளநாகனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

எங்கோ னிருந்த கம்பலை மூதூர்

Next Post

ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை

Related Posts

நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்த

புறநானூறு நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்தவேக வெந்திறல் நாகம் புக்கெனவிசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்…
Read More

மண் திணிந்த நிலனும்

புறநானூறு மண் திணிந்த நிலனும்நிலம் ஏந்திய விசும்பும்விசும்பு தைவரு வளியும்வளித் தலைஇய தீயும்தீ முரணிய நீரும் என்றாங்குஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது…
Read More

வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்

புறநானூறு வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்துஅளைச்செறி உழுவை இரைக்குவந் தன்னமலைப்பரும் அகலம் மதியார் சிலைத்தெழுந்துவிழுமியம் பெரியம் யாமே நம்மிற்பொருநனும்…
Read More