ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ

புறநானூறு

ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கு மொருகண் போல
வேந்துமேம் பட்ட பூந்தார் மாற
கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன்மறவரும் என
நான்குடன் மாண்ட தாயினு மாண்ட
அறநெறி முதற்றே யரசின் கொற்றம்
அதனால், நமரெனக் கோல்கோடாது
பிறரெனக் குணங்கொல்லாது
ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையும்
திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்
வானத் தன்ன வண்மையு மூன்றும்
உடையை யாகி யில்லோர் கையற
நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்
வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
நெடுவே ணிலைஇய காமர் வியன்றுறைக்
டுவளி தொகுப்ப வீண்டிய
வடுவா ழெக்கர் மணலினும் பலவே

மருதனிளநாகனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

எங்கோ னிருந்த கம்பலை மூதூர்

Next Post

ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை

Related Posts

யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப

புறநானூறு யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்பஇழை வலந்த பஃறுன்னத்துஇடைப் புரைபற்றிப் பிணி விடாஅஈர்க் குழாத்தொடு இறை கூர்ந்தபேஎன் பகையென ஒன்று என்கோஉண்ணா மையின் ஊன்…
Read More

நெல் அரியும் இருந் தொழுவர்

புறநானூறு நெல் அரியும் இருந் தொழுவர்செஞ் ஞாயிற்று வெயில் முனையின்தென் கடல்திரை மிசைப்பா யுந்துதிண் திமில் வன் பரதவர்வெப் புடைய மட் டுண்டுதண் குரவைச்…
Read More

வளரத் தொடினும் வெளவுபு திரிந்து

புறநானூறு வளரத் தொடினும் வெளவுபு திரிந்துவிளரி உறுதரும் தீந்தொடை நினையாத்தளரும் நெஞ்சம் தலைஇ மனையோள்உளரும் கூந்தல் நோக்கி களரகள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்பசிபடு மருங்குலை…
Read More
Exit mobile version