ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை

புறநானூறு

ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்
கடல்வளர் புரிவளை புரையு மேனி
அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்
மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்
மணிமயி லுயரிய மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென
ஞாலங் காக்குங் கால முன்பிற்
றோலா நல்லிசை நால்வ ருள்ளும்
கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்
வலியொத் தீயே வாலி யோனைப்
புகழொத் தீயே முன்னியது முடித்தலின்
முருகொத் தீயே முன்னியது முடித்தலின்
ஆங்காங் கவரவ ரொத்தலின் யாங்கும்
அரியவு முளவோ நினக்கே யதனால்
இரவலர்க் கருங்கல மருகா தீயா
யவனர் நன்கலந் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்
ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்
தாங்கினி தொழுகுமதி யோங்குவாண் மாற
அங்கண் விசும்பி னாரிரு ளகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவுங் குடதிசைத்
தண்கதிர் மதியம் போலவும்
நின்று நிலைஇய ருலகமோ டுடனே

நக்கீரனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ

Next Post

வல்லா ராயினும் வல்லுந ராயினும்

Related Posts

இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்

புறநானூறு இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்மடவரல் உண்கண் வாள்நதல் விறலிபொருநரும் உளரோ நும் அகன்றலை நாட்டு எனவினவல் ஆனாப் பொருபடை வேந்தேஎறிகோல் அஞ்சா…
Read More

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

புறநானூறு சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்புலி சேர்ந்து போகிய கல்அளை போலஈன்ற வயிறோ இதுவேதோன்றுவன் மாதோ போர்க்களத் தானே…
Read More

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

புறநானூறு குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்ஆள் அன்று என்று வாளின் தப்பார்தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇயகேளல் கேளிர் வேளாண் சிறுபதம்மதுகை இன்றி வயிற்றுத் தீத்…
Read More