வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்

புறநானூறு

வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்
அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து
அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன
மலைப்பரும் அகலம் மதியார் சிலைத்தெழுந்து
விழுமியம் பெரியம் யாமே நம்மிற்
பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்திற் பெயர
ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான் ஆண்டுஅவர்
மாண்இழை மகளிர் நாணினர் கழியத்
தந்தை தம்மூர் ஆங்கண்
தெண்கிணை கறங்கச்சென்று ஆண்டு அட்டனனே

இடைக்குன்றூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்

Next Post

மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி

Related Posts

வினை மாட்சிய விரை புரவியடு

புறநானூறு வினை மாட்சிய விரை புரவியடுமழை யுருவின தோல் பரப்பிமுனை முருங்கத் தலைச்சென்று அவர்விளை வயல் கவர்பு ஊட்டிமனை மரம் விறகு ஆகக்கடி துறைநீர்க்…
Read More

மண் திணிந்த நிலனும்

புறநானூறு மண் திணிந்த நிலனும்நிலம் ஏந்திய விசும்பும்விசும்பு தைவரு வளியும்வளித் தலைஇய தீயும்தீ முரணிய நீரும் என்றாங்குஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது…
Read More