Tag: புறநானூறு

  • என் புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே

    புறநானூறு

    என் புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே
    யாமே புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே
    போறெதிர்ந்து என் போர்க்களம் புகினே
    கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்
    ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
    உமணர் வெரூஉம் துறையன் னன்னே

    நக்கண்ணையார்

  • கையது வேலே காலன புழல்

    புறநானூறு

    கையது வேலே காலன புழல்
    மெய்யது வியரே மிடற்றது பசும்புண்னக
    வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்
    சுரி இரும் பித்தை பொலியச் சூடி
    வரி வயம் பொருத வயக்களிறு போல
    இன்னும் மாறாது சினனே அன்னோ
    உய்ந்தனர் அல்லர் இவண் உடற்றி யோரே
    செறுவர் நோக்கிய கண் தன்
    சிறுவனை நோக்கியுஞ் சிவப்பு ஆனாவே

    ஔவையார்

  • அடிபுனை தொடுகழல் மையணல் காளைக்குஎன்

    புறநானூறு

    அடிபுனை தொடுகழல் மையணல் காளைக்குஎன்
    தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே
    அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே
    என்போற் பெருவிதுப் புறுக என்றும்
    ஒருபால் படாஅது ஆகி
    இருபாற் பட்ட இம் மையல் ஊரே

    நக்கண்ணையார்

  • அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்

    புறநானூறு

    அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்
    நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
    தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல
    ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்
    பூவார் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல்
    எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயம்
    வழுவின்று எய்தியும் அமையாய் செருவேட்டு
    இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்
    சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய
    அன்றும் பாடுநர்க்கு அரியை இன்றும்
    பரணன் பாடினன் மற்கொல் மற்று நீ
    முரண் மிகு கோவலூர் நூறி நின்
    அரண் அடு திகிரி ஏந்திய தோளே
    வட்கர் போகிய வளரிளம் போந்தை
    உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு

  • சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்

    புறநானூறு

    சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்
    பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
    கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
    போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
    ஊர்கொள வந்த பொருநனொடு
    ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே

    சாத்தந்தையார்

  • முனைத் தெவ்வர் முரண் அவியப்

    புறநானூறு

    முனைத் தெவ்வர் முரண் அவியப்
    பொர்க் குறுகிய நுதி மருப்பின் நின்
    இனக் களிறு செலக் கண்டவர்
    மதிற் கதவம் எழுச் செல்லவும்
    பிணன் அழுங்கக் களன் உழக்கிச்
    செலவு அசைஇய மறுக் குளம்பின் நின்
    இன நன்மாச் செயக் கண்டவர்
    கவை முள்ளின் புழை யடைப்பவும்
    மார்புறச் சேர்ந்து ஒல்காத்
    தோல் செறிப்பில் நின்வேல் கண்டவர்
    தோள் கழியடு பிடி செறிப்பவும்
    வாள் வாய்த்த வடுப் பரந்த நின்
    மற மைந்தர் மைந்து கண்டவர்
    புண்படு குருதி அம்பு ஒடுக்கவும்
    நீயே ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென
    உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும்
    சுற்றத்து அனையை ஆகலின்போற்றார்
    இரங்க விளிவது கொல்லோ வரம்பு அணைந்து
    இறங்குகதிர் அலம்வரு கழனிப்
    பெரும்புனல் படப்பை அவர் அகன்றலை நாடே

    ஔவையார்

  • ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே

    புறநானூறு

    ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே
    கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே
    யார்கொல் அளியர் தாமே ஆர் நார்ச்
    செறியத் தொடுத்த கண்ணிக்
    கவிகை மள்ளன் கைப்பட் டோரே

    சாத்தந்தையார்

  • அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்

    புறநானூறு

    அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்
    திரண்டுநீடு தடக்கை என்னை இளையோற்கு
    இரண்டு எழுந் தனவால் பகையே ஒன்றே
    பூப்போல் உண்கண் பசந்து தோள் நுணுகி
    நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று ஒன்றே
    விழவு இன்று ஆயினும் படு பதம் பிழை யாது
    மைஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர்க்
    கைமான் கொள்ளு மோ என
    உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே

    ஔவையார்

  • இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்

    புறநானூறு

    இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
    மைந்துடைமல்லன் மதவலி முருக்கி
    ஒருகால் மார்பொதுங் கின்றே ஒருகால்
    வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே
    நல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்ப்
    போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம-
    பசித்துப் பணைமுயலும் யானை போல
    இருதலை ஒசிய எற்றிக்
    களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே

    சாத்தந்தையார்

  • இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

    புறநானூறு

    இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்
    கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்து
    கடியுடை வியன்நக ரவ்வே அவ்வே
    பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
    கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
    உண் டாயின் பதம் கொடுத்து
    இல் லாயின் உடன் உண்ணும்
    இல்லோர் ஒக்கல் தலைவன்
    அண்ணல்எம் கோமான் வைந் நுதி வேலே

    ஔவையார்