வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்

புறநானூறு

வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்

Next Post

யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா

Related Posts

ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென

புறநானூறு ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தெனஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டைமலர்ப்போர் யார் என வினவலின் மலைந்தோர்விசிபிணி முரசமொடு மண்பல தந்ததிருவீழ் நுண்பூண் பாண்டியன்…
Read More

ஆடு நடைப் புரவியும் களிறும் தேரும்

புறநானூறு ஆடு நடைப் புரவியும் களிறும் தேரும்வாடா யாணர் நாடும் ஊரும்பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்கோடுஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடுகாலன் என்னும் கண்ணிலி உய்ப்பமேலோர்…
Read More

நறவும் தொடுமின் விடையும் வீழ்மின்

புறநானூறு நறவும் தொடுமின் விடையும் வீழ்மின்பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப்புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்நின்றுநிரையோடு வரூஉம் என்னைக்குஉழையோர் தன்னினும் பெருஞ்சா…
Read More