இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்

புறநானூறு

இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்
மடவரல் உண்கண் வாள்நதல் விறலி
பொருநரும் உளரோ நும் அகன்றலை நாட்டு என
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே
எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளரும் உளரே அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண்கண் கேட்பின்
அது போர் என்னும் என்னையும் உளனே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

யாவிர் அயினும் கூழை தார்கொண்டு

Next Post

உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்

Related Posts

எங்கோ னிருந்த கம்பலை மூதூர்

புறநானூறு எங்கோ னிருந்த கம்பலை மூதூர்உடையோர் போல விடையின்று குறுகிச்செம்ம னாளவை யண்ணாந்து புகுதல்எம்மன வாழ்க்கை யிரவலர்க் கெளிதே5இரவலர்க் கெண்மை யல்லது புரவெதிர்ந்துவான நாண…
Read More