இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா

புறநானூறு

இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி
நிலமிசைப் புரளும் கைய வெய்துயிர்த்து
அலமரல் யானை உருமென முழங்கவும்
பாலில் குழவி அலறவும் மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில்
வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்
துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்
அறவை யாயின் நினது எனத் திறத்தல்
மறவை யாயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லை யாகத்
திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே

கோவூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்

Next Post

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்

Related Posts

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்

புறநானூறு ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்வழுவாய் மருங்கின் கழுவாயும் உள எனநிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்செய்தி…
Read More

ஆரந் தாழ்ந்த வணிகிளர் மார்பிற்

புறநானூறு ஆரந் தாழ்ந்த வணிகிளர் மார்பிற்றாடோய் தடக்கைத் தகைமாண் வழுதிவல்லை மன்ற நீநயந் தளித்தல்தேற்றாய் பெரும பொய்யே யென்றும்காய்சினந் தவிராது கடலூர் பெழுதரும்ஞாயி றனையைநின்…
Read More

இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்

புறநானூறு இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்மடவரல் உண்கண் வாள்நதல் விறலிபொருநரும் உளரோ நும் அகன்றலை நாட்டு எனவினவல் ஆனாப் பொருபடை வேந்தேஎறிகோல் அஞ்சா…
Read More