நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்

புறநானூறு

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
கால்உண வாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி வார் கோல்
கொடுமர மறவர் பெரும கடுமான்
கைவண் தோன்றல் ஐயம் உடையேன்
ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர் மற்றுஇது
நீர்த்தோ நினக்கு என வெறுப்பக் கூறி
நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்
நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும் எனக்
காண்டகு மொய்ம்ப காட்டினை ஆகலின்
யானே பிழைத்தனென் சிறக்கநின் ஆயுள்
மிக்குவரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே

தாமப்பல் கண்ணனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்

Next Post

இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா

Related Posts

மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்

புறநானூறு மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்கருங்கண் எயிற்றி காதல் மகனொடுகான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும்பெருங்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்புலாஅல் அம்பின் போர்அருங் கடிமிளைவலாஅ ரோனே…
Read More

சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்

புறநானூறு சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்னவேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்துவீற்றிருந் தோரை எண்ணுங் காலைஉரையும்…
Read More

வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

புறநானூறு வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்நீர்நிலை…
Read More