புறநானூறு
வினை மாட்சிய விரை புரவியடு
மழை யுருவின தோல் பரப்பி
முனை முருங்கத் தலைச்சென்று அவர்
விளை வயல் கவர்பு ஊட்டி
மனை மரம் விறகு ஆகக்
கடி துறைநீர்க் களிறு படீஇ
எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்
புலம்கெட இறுக்கும் வரம்பில் தானைத்
துணை வேண்டாச் செரு வென்றிப்
புலவு வாள் புலர் சாந்தின்
முருகன் சீற்றத்து உருகெழு குருசில்
மயங்கு வள்ளை மலர் ஆம்பல்
பனிப் பகன்றைக் சுனிப் பாகல்
கரும்பு அல்லது காடு அறியாப்
பெருந் தண்பணை பாழ் ஆக
ஏமநன் னாடு ஒள்எரி ஊட்டினை
நாம நல்லமர் செய்ய
ஒராங்கு மலைந்தன பெரும நின் களிறே
பாண்டரங் கண்ணனார்