Tag: எட்டுத்தொகை

  • யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா

    புறநானூறு

    யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா
    பொருள்அறி வாரா ஆயினும் தந்தையர்க்கு
    அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை
    என்வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்
    கடி மதில் அரண்பல கடந்து
    நெடுமான் அஞ்சி நீ அருளல் மாறே

    ஔவையார்

  • வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்

    புறநானூறு

    வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
    களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை
    ஆர்கலி நறவின் அதியர் கோமான்
    போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி
    பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
    நீல மணிமிடற்று ஒருவன் போல
    மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
    பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
    சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
    ஆதல் நின்னகத்து அடக்கிச்
    சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே

    ஔவையார்

  • உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்

    புறநானூறு

    உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்
    அடைமல்கு குளவியடு கமழும் சாரல்
    மறப்புலி உடலின் மான்கணம் உளவோ
    மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
    இருளும் உண்டோ ஞாயிறு சினவின்
    அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய
    பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய
    விரிமணல் ஞெமரக் கல்பக நடக்கும்
    பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ
    எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை
    வழுவில் வன்கை மழவர் பெரும
    இருநில மண் கொண்டு சிலைக்கும்
    பொருநரும் உளரோ நீ களம் புகினே

    ஔவையார்

  • இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்

    புறநானூறு

    இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்
    மடவரல் உண்கண் வாள்நதல் விறலி
    பொருநரும் உளரோ நும் அகன்றலை நாட்டு என
    வினவல் ஆனாப் பொருபடை வேந்தே
    எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
    சிறுவன் மள்ளரும் உளரே அதாஅன்று
    பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
    வளி பொரு தெண்கண் கேட்பின்
    அது போர் என்னும் என்னையும் உளனே

    ஔவையார்

  • யாவிர் அயினும் கூழை தார்கொண்டு

    புறநானூறு

    யாவிர் அயினும் கூழை தார்கொண்டு
    யாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்
    ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்
    கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
    விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே

    ஔவையார்

  • களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து

    புறநானூறு

    களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து
    எம்முளும் உளன்ஒரு பொருநன் வைகல்
    எண் தேர் செய்யும் தச்சன்
    திங்கள் வலித்த கால்அன் னோனே

    ஔவையார்

  • சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

    புறநானூறு

    சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
    யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்
    புலி சேர்ந்து போகிய கல்அளை போல
    ஈன்ற வயிறோ இதுவே
    தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே

    காவற்பெண்டு

  • என்னைக்கு ஊர் இஃது அன்மை யானும்

    புறநானூறு

    என்னைக்கு ஊர் இஃது அன்மை யானும்
    என்னைக்கு நாடு இஃது அன்மை யானும்
    ஆடுஆடு என்ப ஒருசா ரோரே
    ஆடன்று என்ப ஒருசா ரோரே
    நல்லபல்லோர் இருநன் மொழியே
    அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி எம்இல்
    முழா அரைப் போந்தை பொருந்தி நின்று
    யான்கண் டனன் அவன் ஆடா குதலே

    நக்கண்ணையார்

  • என் புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே

    புறநானூறு

    என் புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே
    யாமே புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே
    போறெதிர்ந்து என் போர்க்களம் புகினே
    கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்
    ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
    உமணர் வெரூஉம் துறையன் னன்னே

    நக்கண்ணையார்

  • கையது வேலே காலன புழல்

    புறநானூறு

    கையது வேலே காலன புழல்
    மெய்யது வியரே மிடற்றது பசும்புண்னக
    வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்
    சுரி இரும் பித்தை பொலியச் சூடி
    வரி வயம் பொருத வயக்களிறு போல
    இன்னும் மாறாது சினனே அன்னோ
    உய்ந்தனர் அல்லர் இவண் உடற்றி யோரே
    செறுவர் நோக்கிய கண் தன்
    சிறுவனை நோக்கியுஞ் சிவப்பு ஆனாவே

    ஔவையார்