Author: Pulan

  • அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்

    புறநானூறு

    அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்
    நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
    தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல
    ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்
    பூவார் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல்
    எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயம்
    வழுவின்று எய்தியும் அமையாய் செருவேட்டு
    இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்
    சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய
    அன்றும் பாடுநர்க்கு அரியை இன்றும்
    பரணன் பாடினன் மற்கொல் மற்று நீ
    முரண் மிகு கோவலூர் நூறி நின்
    அரண் அடு திகிரி ஏந்திய தோளே
    வட்கர் போகிய வளரிளம் போந்தை
    உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு

  • முனைத் தெவ்வர் முரண் அவியப்

    புறநானூறு

    முனைத் தெவ்வர் முரண் அவியப்
    பொர்க் குறுகிய நுதி மருப்பின் நின்
    இனக் களிறு செலக் கண்டவர்
    மதிற் கதவம் எழுச் செல்லவும்
    பிணன் அழுங்கக் களன் உழக்கிச்
    செலவு அசைஇய மறுக் குளம்பின் நின்
    இன நன்மாச் செயக் கண்டவர்
    கவை முள்ளின் புழை யடைப்பவும்
    மார்புறச் சேர்ந்து ஒல்காத்
    தோல் செறிப்பில் நின்வேல் கண்டவர்
    தோள் கழியடு பிடி செறிப்பவும்
    வாள் வாய்த்த வடுப் பரந்த நின்
    மற மைந்தர் மைந்து கண்டவர்
    புண்படு குருதி அம்பு ஒடுக்கவும்
    நீயே ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென
    உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும்
    சுற்றத்து அனையை ஆகலின்போற்றார்
    இரங்க விளிவது கொல்லோ வரம்பு அணைந்து
    இறங்குகதிர் அலம்வரு கழனிப்
    பெரும்புனல் படப்பை அவர் அகன்றலை நாடே

    ஔவையார்

  • இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

    புறநானூறு

    இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்
    கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்து
    கடியுடை வியன்நக ரவ்வே அவ்வே
    பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
    கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
    உண் டாயின் பதம் கொடுத்து
    இல் லாயின் உடன் உண்ணும்
    இல்லோர் ஒக்கல் தலைவன்
    அண்ணல்எம் கோமான் வைந் நுதி வேலே

    ஔவையார்

  • ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்

    புறநானூறு

    ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
    நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
    இனியை பெரும எமக்கே மற்றதன்
    துன்னருங் கடாஅம் போல
    இன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே

    ஔவையார்

  • திண் பிணி முரசம் இழுமென முழங்கச்

    புறநானூறு

    திண் பிணி முரசம் இழுமென முழங்கச்
    சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர்
    தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு
    ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்
    நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
    காதல் மறந்து அவர் தீதுமருங் கறுமார்
    அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
    திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
    மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
    நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க என
    வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
    வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
    அண்ணல் யானை அடுகளத் தொழிய
    அருஞ்சமம் ததைய நூறி நீ
    பெருந் தகை விழுப்புண் பட்ட மாறே

    ஔவையார்

  • யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா

    புறநானூறு

    யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா
    பொருள்அறி வாரா ஆயினும் தந்தையர்க்கு
    அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை
    என்வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்
    கடி மதில் அரண்பல கடந்து
    நெடுமான் அஞ்சி நீ அருளல் மாறே

    ஔவையார்

  • வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்

    புறநானூறு

    வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
    களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை
    ஆர்கலி நறவின் அதியர் கோமான்
    போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி
    பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
    நீல மணிமிடற்று ஒருவன் போல
    மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
    பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
    சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
    ஆதல் நின்னகத்து அடக்கிச்
    சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே

    ஔவையார்

  • உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்

    புறநானூறு

    உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்
    அடைமல்கு குளவியடு கமழும் சாரல்
    மறப்புலி உடலின் மான்கணம் உளவோ
    மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
    இருளும் உண்டோ ஞாயிறு சினவின்
    அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய
    பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய
    விரிமணல் ஞெமரக் கல்பக நடக்கும்
    பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ
    எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை
    வழுவில் வன்கை மழவர் பெரும
    இருநில மண் கொண்டு சிலைக்கும்
    பொருநரும் உளரோ நீ களம் புகினே

    ஔவையார்

  • இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்

    புறநானூறு

    இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்
    மடவரல் உண்கண் வாள்நதல் விறலி
    பொருநரும் உளரோ நும் அகன்றலை நாட்டு என
    வினவல் ஆனாப் பொருபடை வேந்தே
    எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
    சிறுவன் மள்ளரும் உளரே அதாஅன்று
    பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
    வளி பொரு தெண்கண் கேட்பின்
    அது போர் என்னும் என்னையும் உளனே

    ஔவையார்

  • என்னைக்கு ஊர் இஃது அன்மை யானும்

    புறநானூறு

    என்னைக்கு ஊர் இஃது அன்மை யானும்
    என்னைக்கு நாடு இஃது அன்மை யானும்
    ஆடுஆடு என்ப ஒருசா ரோரே
    ஆடன்று என்ப ஒருசா ரோரே
    நல்லபல்லோர் இருநன் மொழியே
    அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி எம்இல்
    முழா அரைப் போந்தை பொருந்தி நின்று
    யான்கண் டனன் அவன் ஆடா குதலே

    நக்கண்ணையார்