திண் பிணி முரசம் இழுமென முழங்கச்

புறநானூறு

திண் பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர்
தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
காதல் மறந்து அவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க என
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
அண்ணல் யானை அடுகளத் தொழிய
அருஞ்சமம் ததைய நூறி நீ
பெருந் தகை விழுப்புண் பட்ட மாறே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா

Next Post

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்

Related Posts

கையது வேலே காலன புழல்

புறநானூறு கையது வேலே காலன புழல்மெய்யது வியரே மிடற்றது பசும்புண்னகவெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்சுரி இரும் பித்தை பொலியச் சூடிவரி வயம் பொருத வயக்களிறு…
Read More

இரு முந்நீர்க் குட்டமும்

புறநானூறு இரு முந்நீர்க் குட்டமும்வியன் ஞாலத்து அகலமும்வளி வழங்கு திசையும்வறிது நிலைஇய காயமும் என்றாங்குஅவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியைஅறிவும் ஈரமும் பெருங்க ணோட்டமும்சோறு…
Read More

மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி

புறநானூறு மெல்ல வந்து என் நல்லடி பொருந்திஈயென இரக்குவர் ஆயின் சீருடைமுரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென் இந்நிலத்துஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது என்உள்ளம் எள்ளிய…
Read More