மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி

புறநானூறு

மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி
ஈயென இரக்குவர் ஆயின் சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்
இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென் இந்நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது என்
உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே மைந்துடைக்
கழைதின் யானைக் கால் அகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலச் சென்று அவண்
வருந்தப் பொரேஎன் ஆயின் பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக என் தாரே

நலங்கிள்ளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்

Next Post

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

Related Posts

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்

புறநானூறு ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்நீர்த்துறை படியும் பெருங்களிறு போலஇனியை பெரும எமக்கே மற்றதன்துன்னருங் கடாஅம் போலஇன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே ஔவையார்
Read More

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

புறநானூறு சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்அறத்து வழிப்படூஉம் தோற்றம் போலஇரு குடை பின்பட ஓங்கி ஒரு குடைஉருகெழு மதியின் நிவந்துசேண் விளங்கநல்லிசை வேட்டம் வேண்டி…
Read More

இன்று செலினுந் தருமே சிறுவரை

புறநானூறு இன்று செலினுந் தருமே சிறுவரைநின்று செலினுந் தருமே பின்னும்முன்னே தந்தனென் என்னாது துன்னிவைகலும் செலினும் பொய்யலன் ஆகியாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்தான்வேண்டி யாங்குத்…
Read More