Tag: வெண்பா

  • சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

    புறநானூறு

    சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
    அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல
    இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை
    உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க
    நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப்
    பாசறை யல்லது நீயல் லாயே
    நிதிமுகம் மழுங்க மண்டி ஒன்னார்
    கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே
    போர் எனில் புகலும் புனைகழல் மறவர்
    காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய
    செல்வேம் அல்லேம் என்னார் கல்லென்
    விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்
    குண கடல் பின்ன தாகக் குட கடல்
    வெண் தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப
    வலமுறை வருதலும் உண்டு என்று அலமந்து
    நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்
    துஞ்சாக் கண்ண வட புலத்து அரசே

    கோவூர்கிழார்

  • செஞ்ஞா யிற்றுச் செலவும்

    புறநானூறு

    செஞ்ஞா யிற்றுச் செலவும்
    அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
    பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்
    வளி திரிதரு திசையும்
    வறிது நிலைஇய காயமும் என்றிவை
    சென்றளந்து அறிந்தார் போல என்றும்
    இனைத்து என்போரும் உளரே அனைத்தும்
    அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்
    களிறுகவுள் அடுத்த எறிகல் போல
    ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட
    யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு
    மீப்பாய் களையாது மிசைப் பரந் தோண்டாது
    புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
    இடைப்புலப் பெருவழிச் சொரியும்
    கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே

    உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

  • அழல் புரிந்த அடர் தாமரை

    புறநானூறு

    அழல் புரிந்த அடர் தாமரை
    ஐது அடர்ந்ற நூற் பெய்து
    புனை விளைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல்
    பாறு மயிர் இருந்தலை பொலியச் சூடிப்
    பாண் முற்றுக நின் நாள்மகிழ் இருக்கை
    பாண் முற்று ஒழிந்த பின்றை மகளிர்
    தோள் முற்றுக நின் சாந்துபுலர் அகலம் ஆங்க
    முனிவில் முற்றத்து இனிது முரசு இயம்பக்
    கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க்குஅளித்தலும்
    ஒடியா முறையின் மடிவிலை யாகி
    நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
    இல்லை என்போர்க்கு இனன் ஆகி லியர்
    நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்
    ஒழி மடல் விறகின் கழுமீன் சுட்டு
    வெங்கள் தொலைச்சியும் அமையார் தெங்கின்
    இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு
    பெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள்
    பற்றா மாக்களின் பரிவு முந்து உறுத்துக்
    கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்
    சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு
    உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
    ஊழிற்று ஆக நின் செய்கை விழவின்
    கோடியர் நீர்மை போல முறை முறை
    ஆடுநர் கழியும்இவ் உலகத்துக் கூடிய
    நகைப் புறனாக நின் சுற்றம்
    இசைப்புற னாக நீ ஓம்பிய பொருளே

    உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

  • சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்

    புறநானூறு

    சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்
    கூனும் குறளும் ஊமும் செவிடும்
    மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
    எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்
    பேதைமை அல்லது ஊதியம் இல் என
    முன்னும் அறிந்தோர் கூறினர் இன்னும்
    அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது-
    வட்ட வரிய செம்பொறிச் சேவல்
    ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
    கானத் தோர் நின் தெவ்வர் நீயே
    புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து அகத்தோர்
    புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
    பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்
    ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே
    அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
    ஆற்றும் பெரும நின்செல்வம்
    ஆற்றாமை நின் போற்றா மையே

    உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

  • சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்

    புறநானூறு

    சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்
    நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன
    வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து
    வீற்றிருந் தோரை எண்ணுங் காலை
    உரையும் பாட்டும் உடையோர் சிலரே
    மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே
    புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
    வலவன் ஏவா வான ஊர்தி
    எய்துப என்ப தம் செய்வினை முடித்து எனக்
    கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி
    தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
    மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்
    அறியா தோரையும் அறியக் காட்டித்
    திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து
    வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
    வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
    அருள வல்லை ஆகுமதி அருளிலர்
    கொடா அமை வல்லர் ஆகுக
    கெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே

    உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

  • நளி கடல் இருங் குட்டத்து

    புறநானூறு

    நளி கடல் இருங் குட்டத்து
    வளி புடைத்த கலம் போலக்
    களிறு சென்று களன் அகற்றவும்
    களன் அகற்றிய வியல் ஆங்கண்
    ஒளிறு இலைய எஃகு ஏந்தி
    அரைசு பட அமர் உழக்கி
    உரை செல முரசு வெளவி
    முடித் தலை அடுப் பாகப்
    புனல் குருதி உலைக் கொளீஇத்
    தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின்
    அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய
    ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
    நான்மறை முதல்வர் சுற்ற மாக
    மன்னர் ஏவல் செய்ய மன்னிய
    வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே
    நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு
    மாற்றார் என்னும் பெயர் பெற்று
    ஆற்றார் ஆயினும் ஆண்டுவாழ் வோரே

    மாங்குடி கிழவர்

  • மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல

    புறநானூறு

    மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல
    ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது
    உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு
    நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங்கு
    உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை
    அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்
    பிணியுறு முரசம் கொண்ட காலை
    நிலைதிரிபு எறியத் திண்மடை கலங்கிச்
    சிதைதல் உய்ந்தன்றோ நின்வேல் செழிய
    முலைபொலி அகம் உருப்ப நூறி
    மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்
    ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர
    அவிர் அறல் கடுக்கும் அம் மென்
    குவை யிரும் கூந்தல் கொய்தல் கண்டே

    கல்லாடனார்

  • நெல் அரியும் இருந் தொழுவர்

    புறநானூறு

    நெல் அரியும் இருந் தொழுவர்
    செஞ் ஞாயிற்று வெயில் முனையின்
    தென் கடல்திரை மிசைப்பா யுந்து
    திண் திமில் வன் பரதவர்
    வெப் புடைய மட் டுண்டு
    தண் குரவைச் சீர்தூங் குந்து
    தூவற் கலித்த தேம்பாய் புன்னை
    மெல்லிணர்க் கன்ணி மிலைந்த மைந்தர்
    எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து
    வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
    முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்
    இரும் பனையின் குரும்பை நீரும்
    பூங் கரும்பின் தீஞ் சாறும்
    ஓங்கு மணற் குலவுத் தாழைத்
    தீ நீரோடு உடன் விராஅய்
    முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்
    தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய
    ஒம்பா ஈகை மாவேள் எவ்வி
    புனலம் புதவின் மிழலையடு_ கழனிக்
    கயலார் நாரை போர்வில் சேக்கும்
    பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
    குப்பை நெல்லின் முத்தூறு தந்த
    கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய
    நின்று நிலைஇயர் நின் நாண்மீன் நில்லாது
    படாஅச் செலீஇயர் நின்பகைவர் மீனே
    நின்னொடு தொன்றுமூத்த உயிரினும் உயிரொடு
    நின்று மூத்த யாக்கை யன்ன நின்
    ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த
    வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த
    இரவன் மாக்கள் ஈகை நுவல
    ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
    தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
    ஆங்குஇனிது ஒழுகுமதி பெரும ஆங்கது
    வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல்லிசை
    மலர்தலை உலகத்துத் தோன்றிப்
    பலர்செலச் செல்லாது நின்று விளிந் தோரே

    மாங்குடி கிழவர்

  • வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்

    புறநானூறு

    வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்
    களிறுபடிந்து உண்டெனக் கலங்கிய துறையும்
    கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்
    சூர்நவை முருகன் சுற்றத்து அன்ன நின்
    கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர்
    கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்
    கொள்பதம் ஒழிய வீசிய புலனும்
    வடிநவில் நவியம் பாய்தலின் ஊர்தொறும்
    கடிமரம் துளங்கிய காவும் நெடுநகர்
    வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக்
    கனைஎரி உரறிய மருங்கும் நோக்கி
    நண்ணார் நாண நாள்தொறும் தலைச்சென்று
    இன்னும் இன்னபல செய்குவன் யாவரும்
    துன்னல் போகிய துணிவினோன் என
    ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை
    ஆலங் கானத்து அமர்கடந்து அட்ட
    கால முன்ப நின் கண்டனென் வருவல்
    அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச்
    சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
    பூளை நீடிய வெருவரு பறந்தலை
    வேளை வெண்பூக் கறிக்கும்
    ஆளில் அத்தம் ஆகிய காடே

    கல்லாடனார்

  • வரை புரையும் மழகளிற்றின் மிசை

    புறநானூறு

    வரை புரையும் மழகளிற்றின் மிசை
    வான் துடைக்கும் வகைய போல
    விரவு உருவின கொடி நுடங்கும்
    வியன் தானை விறல் வேந்தே
    நீ உடன்று நோக்கும்வாய் எரிதவழ
    நீ நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச்
    செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்
    வெண் திங்களுள் வெயில் வேண்டினும்
    வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்
    நின்நிழல் பிறந்து நின்நிழல் வளர்ந்த
    எம் அளவு எவனோ மற்றே இன்நிலைப்
    பொலம்பூங் காவின் நன்னாட் டோரும்
    செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை
    உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
    கடவ தன்மையின் கையறவு உடைத்து என
    ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்
    நின்நாடு உள்ளுவர் பரிசிலர்
    ஒன்னார் தேஎத்தும் நின்னுடைத் தெனவே

    ஆவூர் மூலங் கிழார்