மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல

புறநானூறு

மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது
உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு
நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங்கு
உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை
அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்
பிணியுறு முரசம் கொண்ட காலை
நிலைதிரிபு எறியத் திண்மடை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றோ நின்வேல் செழிய
முலைபொலி அகம் உருப்ப நூறி
மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர
அவிர் அறல் கடுக்கும் அம் மென்
குவை யிரும் கூந்தல் கொய்தல் கண்டே

கல்லாடனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நெல் அரியும் இருந் தொழுவர்

Next Post

நளி கடல் இருங் குட்டத்து

Related Posts

முற்றிய திருவின் மூவர் ஆயினும்

புறநானூறு முற்றிய திருவின் மூவர் ஆயினும்பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமேவிறற்சினம் தணிந்த விரைபரிப் புரவிஉறுவர் செல்சார்வு ஆகிச் செறுவர்தாளுளம் தபுத்த வாள்மிகு தானைவெள்வீ வேலிக்…
Read More

பாணன் சூடிய பசும்பொன் தாமரை

புறநானூறு பாணன் சூடிய பசும்பொன் தாமரைமாணிழை விறலி மாலையடு விளங்கக்கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்யாரீ ரோ என வனவல் ஆனாக்காரென்…
Read More

ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்

புறநானூறு ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்றுகொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன்எதிர்கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்றுதெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்உண்ணார் ஆகுப…
Read More