யாதும் ஊரே யாவரும் கேளிர்

புறநானூறு

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் அல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

கணியன் பூங்குன்றன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கண்ணி கார் நறுங்கொன்றை காமர்

Related Posts

நீயே தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே

புறநானூறு நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை யிவனேமுழுமுத றொலைந்த கோளி யாலத்துக்கொழுநிழ னெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாதுநல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇஇளைய…
Read More

மெல்லியல் விறலி நீ நல்லிசை செவியிற்

புறநானூறு மெல்லியல் விறலி நீ நல்லிசை செவியிற்கேட்பின் அல்லது காண்பறி யலையேகாண்டல் சால வேண்டினை யாயின்- மாண்ட நின்விரை வளர் கூந்தல் வரைவளி உளரக்கலவ…
Read More

நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்த

புறநானூறு நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்தவேக வெந்திறல் நாகம் புக்கெனவிசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்…
Read More