நளி கடல் இருங் குட்டத்து

புறநானூறு

நளி கடல் இருங் குட்டத்து
வளி புடைத்த கலம் போலக்
களிறு சென்று களன் அகற்றவும்
களன் அகற்றிய வியல் ஆங்கண்
ஒளிறு இலைய எஃகு ஏந்தி
அரைசு பட அமர் உழக்கி
உரை செல முரசு வெளவி
முடித் தலை அடுப் பாகப்
புனல் குருதி உலைக் கொளீஇத்
தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின்
அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்ற மாக
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே
நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு
மாற்றார் என்னும் பெயர் பெற்று
ஆற்றார் ஆயினும் ஆண்டுவாழ் வோரே

மாங்குடி கிழவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல

Next Post

சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்

Related Posts

மண் திணிந்த நிலனும்

புறநானூறு மண் திணிந்த நிலனும்நிலம் ஏந்திய விசும்பும்விசும்பு தைவரு வளியும்வளித் தலைஇய தீயும்தீ முரணிய நீரும் என்றாங்குஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது…
Read More

கடுங்கண்ண கொல் களிற்றால்

புறநானூறு கடுங்கண்ண கொல் களிற்றால்காப் புடைய எழு முருக்கிப்பொன் இயல் புனை தோட்டியான்முன்பு துரந்து சமந் தாங்கவும்பார்உடைத்த குண்டு அகழிநீர் அழுவம் நிவப்புக் குறித்துநிமிர்…
Read More

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்

புறநானூறு ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்நீர்த்துறை படியும் பெருங்களிறு போலஇனியை பெரும எமக்கே மற்றதன்துன்னருங் கடாஅம் போலஇன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே ஔவையார்
Read More