Tag: புறம்

  • ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்

    புறநானூறு

    ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
    நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
    இனியை பெரும எமக்கே மற்றதன்
    துன்னருங் கடாஅம் போல
    இன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே

    ஔவையார்

  • திண் பிணி முரசம் இழுமென முழங்கச்

    புறநானூறு

    திண் பிணி முரசம் இழுமென முழங்கச்
    சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர்
    தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு
    ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்
    நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
    காதல் மறந்து அவர் தீதுமருங் கறுமார்
    அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
    திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
    மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
    நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க என
    வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
    வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
    அண்ணல் யானை அடுகளத் தொழிய
    அருஞ்சமம் ததைய நூறி நீ
    பெருந் தகை விழுப்புண் பட்ட மாறே

    ஔவையார்

  • யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா

    புறநானூறு

    யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா
    பொருள்அறி வாரா ஆயினும் தந்தையர்க்கு
    அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை
    என்வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்
    கடி மதில் அரண்பல கடந்து
    நெடுமான் அஞ்சி நீ அருளல் மாறே

    ஔவையார்

  • வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்

    புறநானூறு

    வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
    களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை
    ஆர்கலி நறவின் அதியர் கோமான்
    போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி
    பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
    நீல மணிமிடற்று ஒருவன் போல
    மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
    பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
    சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
    ஆதல் நின்னகத்து அடக்கிச்
    சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே

    ஔவையார்

  • உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்

    புறநானூறு

    உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்
    அடைமல்கு குளவியடு கமழும் சாரல்
    மறப்புலி உடலின் மான்கணம் உளவோ
    மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
    இருளும் உண்டோ ஞாயிறு சினவின்
    அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய
    பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய
    விரிமணல் ஞெமரக் கல்பக நடக்கும்
    பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ
    எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை
    வழுவில் வன்கை மழவர் பெரும
    இருநில மண் கொண்டு சிலைக்கும்
    பொருநரும் உளரோ நீ களம் புகினே

    ஔவையார்

  • இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்

    புறநானூறு

    இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்
    மடவரல் உண்கண் வாள்நதல் விறலி
    பொருநரும் உளரோ நும் அகன்றலை நாட்டு என
    வினவல் ஆனாப் பொருபடை வேந்தே
    எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
    சிறுவன் மள்ளரும் உளரே அதாஅன்று
    பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
    வளி பொரு தெண்கண் கேட்பின்
    அது போர் என்னும் என்னையும் உளனே

    ஔவையார்

  • யாவிர் அயினும் கூழை தார்கொண்டு

    புறநானூறு

    யாவிர் அயினும் கூழை தார்கொண்டு
    யாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்
    ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்
    கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
    விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே

    ஔவையார்

  • களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து

    புறநானூறு

    களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து
    எம்முளும் உளன்ஒரு பொருநன் வைகல்
    எண் தேர் செய்யும் தச்சன்
    திங்கள் வலித்த கால்அன் னோனே

    ஔவையார்

  • சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

    புறநானூறு

    சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
    யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்
    புலி சேர்ந்து போகிய கல்அளை போல
    ஈன்ற வயிறோ இதுவே
    தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே

    காவற்பெண்டு

  • கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்

    புறநானூறு

    கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்
    களிற்று முக வரியின் தெறுழ்வீ பூப்பச்
    செம் புற்று ஈயலின் இன்அளைப் புளித்து
    மெந்தினை யாணர்த்து நந்துங் கொல்லோ
    நிழலில் நீளிடைத் தனிமரம் போலப்
    பணைகெழு வேந்தரை இறந்தும்
    இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே

    கபிலர்