Author: Pulan

  • மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்

    புறநானூறு

    மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
    பால்தர வந்த பழவிறல் தாயம்
    எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பு என
    குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
    சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே
    மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
    விழுமியோன் பெறுகுவன் ஆயின் தாழ்நீர்
    அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
    என்றூழ் வாடுவறல் போல நன்றும்
    நொய்தால் அம்ம தானே-மையற்று
    விசும்புஉற ஓங்கிய வெண்குடை
    முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே

    நலங்கிள்ளி

  • மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி

    புறநானூறு

    மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி
    மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து
    தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
    வெம்போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்த
    வம்ப மள்ளரோ பலரே
    எஞ்சுவர் கொல்லோ பகல்தவச் சிறிதே

    இடைக்குன்றூர் கிழார்

  • உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்

    புறநானூறு

    உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்
    கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது
    சில்செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து
    ஈங்குஎவன் செய்தியோ பாண பூண்சுமந்து
    அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து
    மென்மையின் மகளிர்க்கு வணங்கிவன்மையின்
    ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை
    புனிறு தீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்
    சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்
    மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்
    உட்பகை ஒருதிறம் பட்டெனப் புட்பகைக்கு
    ஏவான் ஆகலின் சாவோம் யாம் என
    நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
    தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்
    கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகத்த
    நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
    நெடுனகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும்
    உறந்தை யோனே குருசில்
    பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே

    கோவூர் கிழார்

  • வருதார் தாங்கி அமர்மிகல் யாவது

    புறநானூறு

    வருதார் தாங்கி அமர்மிகல் யாவது
    பொருது ஆண்டொழிந்த மைந்தர் புண்தொட்டுக்
    குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி
    நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்
    எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப்
    பருந்து அருந்துற்ற தானையடு செருமுனிந்து
    அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
    தாம்மாய்ந் தனரே குடைதுளங் கினவே
    உரைசால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே
    பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்
    இடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்
    களங்கொளற்கு உரியோர் இன்றித் தெறுவர
    உடன்வீழ்ந் தன்றால் அமரே பெண்டிரும்
    பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
    மார்பகம் பொருந்தி ஆங்கமைந் தன்றே
    வாடாப் பூவின் இமையா நாட்டத்து
    நாற்ற உணவினோரும் ஆற்ற
    அரும்பெறல் உலகம் நிறைய
    விருந்துபெற் றனரால் பொலிக நும் புகழே

    கழாத் தலையார்

  • கையது கடன் நிறை யாழே மெய்யது

    புறநானூறு

    கையது கடன் நிறை யாழே மெய்யது
    புரவலர் இன்மையின் பசியே அரையது
    வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
    ஓம்பி உடுத்த உயவற் பாண
    பூட்கை இல்லோன் யாக்கை போலப்
    பெரும்புல் என்ற இரும் பேர் ஒக்கலை
    வையகம் முழுவதுடன் வளைப் பையென
    என்னை வினவுதி ஆயின் மன்னர்
    அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறைக்
    குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப்
    புலாக் களம் செய்த கலாஅத் தானையன்
    பிறங்கு நிலை மாடத்து உறந்தை யோனே
    பொருநர்க்கு ஓங்கிய வேலன் ஒரு நிலைப்
    பகைப் புலம் படர்தலும் உரியன் தகைத் தார்
    ஒள்ளெரி புரையும் உருகெழு புசும்பூண்
    கிள்ளி வளவற் படர்குவை ஆயின்
    நெடுங் கடை நிற்றலும் இலையே கடும் பகல்
    தேர்வீசு இருக்கை ஆர நோக்கி
    நீ அவற் கண்ட பின்றைப் பூவின்
    ஆடுவண்டு இமிராத் தாமரை
    சூடாய் ஆதல் அதனினும் இலையே

    ஆலந்தூர் கிழார்

  • கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்

    புறநானூறு

    கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
    சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்
    மலங்கு மிளிர் செறுவின் தளம்புதடிந் திட்ட
    பழன வாளைப் பரூஉக்கண் துணியல்
    புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக
    விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி
    நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும்
    வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர்
    தெங்குபடு வியன்பழம் முனையின் தந்தையர்
    குறைக்கண் நெடுபோர் ஏறி விசைத் தெழுந்து
    செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும்
    வைகல் யாணர் நன்னாட்டுப் பொருநன்
    எ·குவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி
    சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளர்எனின்
    தாமறி குவர்தமக்கு உறுதி யாம் அவன்
    எழுஉறழ் திணிதோள் வழுவின்றி மலைந்தோர்
    வாழக் கண்டன்றும் இலமே தாழாது
    திருந்து அடி பொருந்த வல்லோர்
    வருந்தக் காண்டல் அதனினும் இலமே

    மதுரைக் குமரனார்

  • மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து

    புறநானூறு

    மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து
    அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து
    என்னொடு பொருந்தும் என்ப அவரை
    ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
    அவர்ப்புறம் காணேன் ஆயின் – சிறந்த
    பேரமர் உண்கண் இவளினும் பிரிக
    அறன்நிலை திரிய அன்பின் அவையத்துத்
    திறன்இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து
    மெலிகோல் செய்தேன் ஆகுக மலி புகழ்
    வையை சூழ்ந்த வலங்கெழு வைப்பின்
    பொய்யா யாணர் மையற் கோமான்
    மாவனும் மன்எயில் ஆந்தையும் உரைசால்
    அந்துவஞ் சாத்தனும் ஆதன் அழிசியும்
    வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும்
    கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த
    இன்களி மகிழ்நகை இழுக்கிய யான் ஒன்றோ
    மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
    தென்புலம் காவலின் ஒரிஇப் பிறர்
    வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே

    பூதப்பாண்டியன்

  • முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச்

    புறநானூறு

    முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச்
    செம்மீ னிமைக்கு மாக விசும்பின்
    உச்சி நின்ற வுவவுமதி கண்டு
    கட்சி மஞ்ஞையிற் சுரமுதல் சேர்ந்த
    சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து
    தொழுதன மல்லமோ பலவே கானற்
    கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும்
    ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும்
    உரனுடை நோன்பகட் டன்ன வெங்கோன்
    வலனிரங்கு முரசின் வாய்வாள் வளவன்
    வெயின்மறைக் கொண்ட வுருகெழு சிறப்பின்
    மாலை வெண்குடை யொக்குமா லெனவே

    தாமோதரனார்

  • மண்முழா மறப்பப் பண் யாழ் மறப்ப

    புறநானூறு

    மண்முழா மறப்பப் பண் யாழ் மறப்ப
    இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்பச்
    சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப
    உழவர் ஓதை மறப்ப விழவும்
    அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப
    உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து
    இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
    புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்
    தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
    புறப்புண் நாணி மறத்தகை மன்னன்
    வாள் வடக்கு இருந்தனன் ஈங்கு
    நாள்போல் கழியல ஞாயிற்றுப் பகலே

    கழாஅத் தலையார்

  • ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே

    புறநானூறு

    ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே
    கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே
    யார்கொல் அளியர் தாமே ஆர் நார்ச்
    செறியத் தொடுத்த கண்ணிக்
    கவிகை மள்ளன் கைப்பட் டோரே

    சாத்தந்தையார்