வருதார் தாங்கி அமர்மிகல் யாவது

புறநானூறு

வருதார் தாங்கி அமர்மிகல் யாவது
பொருது ஆண்டொழிந்த மைந்தர் புண்தொட்டுக்
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி
நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்
எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப்
பருந்து அருந்துற்ற தானையடு செருமுனிந்து
அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாம்மாய்ந் தனரே குடைதுளங் கினவே
உரைசால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே
பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்
இடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்
களங்கொளற்கு உரியோர் இன்றித் தெறுவர
உடன்வீழ்ந் தன்றால் அமரே பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி ஆங்கமைந் தன்றே
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவினோரும் ஆற்ற
அரும்பெறல் உலகம் நிறைய
விருந்துபெற் றனரால் பொலிக நும் புகழே

கழாத் தலையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்

Next Post

எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி

Related Posts

கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும்

புறநானூறு கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும்தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கைஇன்னும் தம்மென எம்ம்னோர் இரப்பின்முன்னும் கொண்டிர்என நும்மனோர் மறுத்தல்இன்னாது அம்ம…
Read More

வினை மாட்சிய விரை புரவியடு

புறநானூறு வினை மாட்சிய விரை புரவியடுமழை யுருவின தோல் பரப்பிமுனை முருங்கத் தலைச்சென்று அவர்விளை வயல் கவர்பு ஊட்டிமனை மரம் விறகு ஆகக்கடி துறைநீர்க்…
Read More

யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா

புறநானூறு யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணராபொருள்அறி வாரா ஆயினும் தந்தையர்க்குஅருள்வந் தனவால் புதல்வர்தம் மழலைஎன்வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்கடி மதில் அரண்பல கடந்துநெடுமான் அஞ்சி…
Read More