அன்னச் சேவல் அன்னச் சேவல்

புறநானூறு

அன்னச் சேவல் அன்னச் சேவல்
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலை யாம் கையறுபு இனையக்
குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின் இடையது
சோழ நன்னாட்டுப் படினே கோழி
உயர் நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கு எம்
பெருங் கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர்
ஆந்தை அடியுறை எனினே மாண்ட நின்
இன்புறு பேடை அணியத் தன்
அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே

பிசிராந்தையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

Next Post

உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்

Related Posts

நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே

புறநானூறு நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனேஇல்லென மறுக்கும் சிறுமையும் இலனேஇறையுறு விழுமம் தாங்கி அமர்அகத்துஇரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய் தீர்ந்துமருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கிவடுவின்றி வடிந்த…
Read More

கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை

புறநானூறு கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரைஅருளிடர்ச் சிறுநெறி ஏறலின் வருந்தித்தடவரல் கொண்ட தகைமெல் ஒதுக்கின்வளைக்கை விறலியென் பின்னள் ஆகப்பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின்வரிநவில் பனுவல்…
Read More

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

புறநானூறு இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்துகடியுடை வியன்நக ரவ்வே அவ்வேபகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்துகொல்துறைக் குற்றில மாதோ…
Read More