எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி

புறநானூறு

எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி
விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே
விறற் புகழ் மாண்ட புரவி எல்லாம்
மறத் தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே
தேர்தர வந்த சான்றோர் எல்லாம்
தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே
விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம்
பொறுக்குநர் இன்மையின் இருந்துவிளிந் தனவே
சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென
வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் இனியே
என்னா வதுகொல் தானே கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
பாசவல் முக்கித் தண்புனல் பாயும்
யாணர் அறாஅ வைப்பின்
காமர் கிடக்கை அவர் அகன்றலை நாடே

பரணர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

வருதார் தாங்கி அமர்மிகல் யாவது

Next Post

அருமிளை இருக்கை யதுவே மனைவியும்

Related Posts

கடந்து அடு தானை மூவிரும் கூடி

புறநானூறு கடந்து அடு தானை மூவிரும் கூடிஉடன்றனிர் ஆயினும் பறம்பு கொள்ற்கு அரிதேமுந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடுமுந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்யாமும் பாரியும் உளமேகுன்றும்…
Read More

யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா

புறநானூறு யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணராபொருள்அறி வாரா ஆயினும் தந்தையர்க்குஅருள்வந் தனவால் புதல்வர்தம் மழலைஎன்வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்கடி மதில் அரண்பல கடந்துநெடுமான் அஞ்சி…
Read More

மாசற விசித்த வார்புஉறு வள்பின்

புறநானூறு மாசற விசித்த வார்புஉறு வள்பின்மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞைஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்பொலங்குழை உழிஞையடு பொலியச் சூட்டிக்குருதி வேட்கை உருகெழு முரசம்மண்ணி வாரா…
Read More