புறநானூறு
அருமிளை இருக்கை யதுவே-மனைவியும்
வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது
படைமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை
யாணர் நல்லவை பாணரொடு ஓராங்கு
வருவிருந்து அயரும் விருப்பினள் கிழவனும்
அருஞ்சமம் ததையத் தாக்கிப் பெருஞ்சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே
நல்யாழ்ஆகுளி பதலையடு சுருக்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை
விசும்புஆடு எருவை புசுந்தடி தடுப்பப்
பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமாற் கண்டு
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே
நெடும்பல்லியத்தனார்