Author: Pulan

  • என்னைக்கு ஊர் இஃது அன்மை யானும்

    புறநானூறு

    என்னைக்கு ஊர் இஃது அன்மை யானும்
    என்னைக்கு நாடு இஃது அன்மை யானும்
    ஆடுஆடு என்ப ஒருசா ரோரே
    ஆடன்று என்ப ஒருசா ரோரே
    நல்லபல்லோர் இருநன் மொழியே
    அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி எம்இல்
    முழா அரைப் போந்தை பொருந்தி நின்று
    யான்கண் டனன் அவன் ஆடா குதலே

    நக்கண்ணையார்

  • களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து

    புறநானூறு

    களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து
    எம்முளும் உளன்ஒரு பொருநன் வைகல்
    எண் தேர் செய்யும் தச்சன்
    திங்கள் வலித்த கால்அன் னோனே

    ஔவையார்

  • யாவிர் அயினும் கூழை தார்கொண்டு

    புறநானூறு

    யாவிர் அயினும் கூழை தார்கொண்டு
    யாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்
    ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்
    கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
    விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே

    ஔவையார்

  • வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்

    புறநானூறு

    வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
    களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை
    ஆர்கலி நறவின் அதியர் கோமான்
    போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி
    பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
    நீல மணிமிடற்று ஒருவன் போல
    மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
    பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
    சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
    ஆதல் நின்னகத்து அடக்கிச்
    சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே

    ஔவையார்

  • இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்

    புறநானூறு

    இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
    மைந்துடைமல்லன் மதவலி முருக்கி
    ஒருகால் மார்பொதுங் கின்றே ஒருகால்
    வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே
    நல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்ப்
    போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம-
    பசித்துப் பணைமுயலும் யானை போல
    இருதலை ஒசிய எற்றிக்
    களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே

    சாத்தந்தையார்

  • என் புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே

    புறநானூறு

    என் புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே
    யாமே புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே
    போறெதிர்ந்து என் போர்க்களம் புகினே
    கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்
    ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
    உமணர் வெரூஉம் துறையன் னன்னே

    நக்கண்ணையார்

  • திண் பிணி முரசம் இழுமென முழங்கச்

    புறநானூறு

    திண் பிணி முரசம் இழுமென முழங்கச்
    சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர்
    தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு
    ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்
    நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
    காதல் மறந்து அவர் தீதுமருங் கறுமார்
    அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
    திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
    மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
    நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க என
    வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
    வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
    அண்ணல் யானை அடுகளத் தொழிய
    அருஞ்சமம் ததைய நூறி நீ
    பெருந் தகை விழுப்புண் பட்ட மாறே

    ஔவையார்

  • அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்

    புறநானூறு

    அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்
    திரண்டுநீடு தடக்கை என்னை இளையோற்கு
    இரண்டு எழுந் தனவால் பகையே ஒன்றே
    பூப்போல் உண்கண் பசந்து தோள் நுணுகி
    நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று ஒன்றே
    விழவு இன்று ஆயினும் படு பதம் பிழை யாது
    மைஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர்க்
    கைமான் கொள்ளு மோ என
    உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே

    ஔவையார்

  • ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்

    புறநானூறு

    ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
    நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
    இனியை பெரும எமக்கே மற்றதன்
    துன்னருங் கடாஅம் போல
    இன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே

    ஔவையார்

  • ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்

    புறநானூறு

    ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
    பலரும் வருவர் பரிசில் மாக்கள்
    வரிசை அறிதலோ அரிதே பெரிதும்
    ஈதல் எளிதே மாவண் தோன்றல்
    அது நற்கு அறிந்தனை யாயின்
    பொது நோக்கு ஒழிமதி புலவர் மாட்டே

    கபிலர்