Author: Pulan

  • யாவிர் அயினும் கூழை தார்கொண்டு

    புறநானூறு

    யாவிர் அயினும் கூழை தார்கொண்டு
    யாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்
    ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்
    கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
    விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே

    ஔவையார்

  • களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து

    புறநானூறு

    களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து
    எம்முளும் உளன்ஒரு பொருநன் வைகல்
    எண் தேர் செய்யும் தச்சன்
    திங்கள் வலித்த கால்அன் னோனே

    ஔவையார்

  • சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

    புறநானூறு

    சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
    யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்
    புலி சேர்ந்து போகிய கல்அளை போல
    ஈன்ற வயிறோ இதுவே
    தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே

    காவற்பெண்டு

  • என்னைக்கு ஊர் இஃது அன்மை யானும்

    புறநானூறு

    என்னைக்கு ஊர் இஃது அன்மை யானும்
    என்னைக்கு நாடு இஃது அன்மை யானும்
    ஆடுஆடு என்ப ஒருசா ரோரே
    ஆடன்று என்ப ஒருசா ரோரே
    நல்லபல்லோர் இருநன் மொழியே
    அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி எம்இல்
    முழா அரைப் போந்தை பொருந்தி நின்று
    யான்கண் டனன் அவன் ஆடா குதலே

    நக்கண்ணையார்

  • என் புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே

    புறநானூறு

    என் புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே
    யாமே புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே
    போறெதிர்ந்து என் போர்க்களம் புகினே
    கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்
    ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
    உமணர் வெரூஉம் துறையன் னன்னே

    நக்கண்ணையார்

  • அடிபுனை தொடுகழல் மையணல் காளைக்குஎன்

    புறநானூறு

    அடிபுனை தொடுகழல் மையணல் காளைக்குஎன்
    தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே
    அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே
    என்போற் பெருவிதுப் புறுக என்றும்
    ஒருபால் படாஅது ஆகி
    இருபாற் பட்ட இம் மையல் ஊரே

    நக்கண்ணையார்

  • சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்

    புறநானூறு

    சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்
    பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
    கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
    போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
    ஊர்கொள வந்த பொருநனொடு
    ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே

    சாத்தந்தையார்

  • ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே

    புறநானூறு

    ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே
    கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே
    யார்கொல் அளியர் தாமே ஆர் நார்ச்
    செறியத் தொடுத்த கண்ணிக்
    கவிகை மள்ளன் கைப்பட் டோரே

    சாத்தந்தையார்

  • இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்

    புறநானூறு

    இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
    மைந்துடைமல்லன் மதவலி முருக்கி
    ஒருகால் மார்பொதுங் கின்றே ஒருகால்
    வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே
    நல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்ப்
    போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம-
    பசித்துப் பணைமுயலும் யானை போல
    இருதலை ஒசிய எற்றிக்
    களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே

    சாத்தந்தையார்

  • ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்

    புறநானூறு

    ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
    பலரும் வருவர் பரிசில் மாக்கள்
    வரிசை அறிதலோ அரிதே பெரிதும்
    ஈதல் எளிதே மாவண் தோன்றல்
    அது நற்கு அறிந்தனை யாயின்
    பொது நோக்கு ஒழிமதி புலவர் மாட்டே

    கபிலர்