எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி

புறநானூறு

எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி
விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே
விறற் புகழ் மாண்ட புரவி எல்லாம்
மறத் தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே
தேர்தர வந்த சான்றோர் எல்லாம்
தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே
விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம்
பொறுக்குநர் இன்மையின் இருந்துவிளிந் தனவே
சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென
வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் இனியே
என்னா வதுகொல் தானே கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
பாசவல் முக்கித் தண்புனல் பாயும்
யாணர் அறாஅ வைப்பின்
காமர் கிடக்கை அவர் அகன்றலை நாடே

பரணர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

வருதார் தாங்கி அமர்மிகல் யாவது

Next Post

அருமிளை இருக்கை யதுவே மனைவியும்

Related Posts

என்னை மார்பிற் புண்ணும் வெய்ய

புறநானூறு என்னை மார்பிற் புண்ணும் வெய்யநடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லாதுஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்நெல்நீர் எறிந்து…
Read More

முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்

புறநானூறு முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டுபச்சூன் தின்று பைந்நிணப் பெருத்தஎச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப்புலம்புக் கனனே…
Read More

ஆரந் தாழ்ந்த வணிகிளர் மார்பிற்

புறநானூறு ஆரந் தாழ்ந்த வணிகிளர் மார்பிற்றாடோய் தடக்கைத் தகைமாண் வழுதிவல்லை மன்ற நீநயந் தளித்தல்தேற்றாய் பெரும பொய்யே யென்றும்காய்சினந் தவிராது கடலூர் பெழுதரும்ஞாயி றனையைநின்…
Read More