Tag: வெண்பா

  • ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்

    புறநானூறு

    ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்
    யானையும் மலையின் தோன்றும் பெரும நின்
    தானையும் கடலென முழங்கும் கூர்நுனை
    வேலும் மின்னின் விளங்கும் உலகத்து
    அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின்
    புரைதீர்ந் தன்று அது புதுவதோ அன்றே
    தண்புனற் பூசல் அல்லது நொந்து
    களைக வாழி வளவ என்று நின்
    முனைதரு பூசல் கனவினும் அறியாது
    புலிபுறங் காக்கும் குருளை போல
    மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்
    பெருவிறல் யாணர்த் தாகி அரிநர்
    கீழ்மடைக் கொண்ட வாளையும் உழவர்
    படைமிளிர்ந் திட்ட யாமையும் அறைநர்
    கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை
    நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
    வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும்
    மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந
    மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி
    நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
    புலவ ரெல்லாம் நின்நோக் கினரே
    நீயே மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
    கூற்றுவெகுண் டன்ன முன்பொடு
    மாற்றுஇரு வேந்தர் மண்நோக் கினையே

    இடைக்காடனார்

  • நீயே தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே

    புறநானூறு

    நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே
    முழுமுத றொலைந்த கோளி யாலத்துக்
    கொழுநிழ னெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
    தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது
    நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ
    இளைய தாயினுங் கிளையரா வெறியும்
    அருநரை யுருமிற் பொருநரைப் பொறாஅச்
    செருமாண் பஞ்சவ ரேறே நீயே
    அறந்துஞ் சுறந்தைப் பொருநனை யிவனே
    நெல்லு நீரு மெல்லார்க்கு மெளியவென
    வரைய சாந்தமுந் திரைய முத்தமும்
    இமிழ்குரன் முரச மூன்றுட னாளும்
    தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே
    பானிற வுருவிற் பனைக்கொடி யோனும்
    நீனிற வுருவி னேமி யோனுமென்
    றிருபெருந் தெய்வமு முடனின் றாஅங்
    குருகெழு தோற்றமொ டுட்குவர விளங்கி
    இன்னீ ராகலி னினியவு முளவோ
    இன்னுங் கேண்மினும் மிசைவா ழியவே
    ஒருவீ ரொருவீர்க் காற்றுதி ரிருவீரும்
    உடனிலை திரியீ ராயி னிமிழ்திரைப்
    பௌவ முடுத்தவிப் பயங்கெழு மாநிலம்
    கையகப் படுவது பொய்யா காதே
    அதனால், நல்ல போலவு நயவ போலவும்
    தொல்லோர் சென்ற நெறிய போலவும்
    காத னெஞ்சினும் மிடைபுகற் கலமரும்
    ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளா
    தின்றே போல்கநும் புணர்ச்சி வென்றுவென்
    றடுகளத் துயர்கநும் வேலே கொடுவரிக்
    கோண்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
    நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
    குடுமிய வாகபிறர் குன்றுகெழு நாடே

    காரிக்கண்ணனார்

  • காலனும் காலம் பார்க்கும் பாராது

    புறநானூறு

    காலனும் காலம் பார்க்கும் பாராது
    வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய
    வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே
    திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்
    பெருமரத்து இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்
    வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும்
    அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்
    எயிறுநிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும்
    களிறுமேல் கொள்ளவும் காழகம் நீப்பவும்
    வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்
    கனவின் அரியன காணா நனவின்
    செருச்செய் முன்ப நின் வருதிறன் நோக்கி
    மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்
    புதல்வர் பூங்கண் முத்தி மனையோட்கு
    எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களடு
    பெருங்கலக் குற்றன்றால் தானே காற்றோடு
    எரிநிகழ்ந் தன்ன செலவின்
    செருமிகு வளவ நிற் சினைஇயோர் நாடே

    கோவூர் கிழார்

  • வல்லா ராயினும் வல்லுந ராயினும்

    புறநானூறு

    வல்லா ராயினும் வல்லுந ராயினும்
    புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன
    உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற
    நின்னொன்று கூறுவ துடையே னென்னெனின்
    நீயே பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட்
    டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க
    நனந்தலைப் பேரூ ரெரியு நைக்க
    மின்னுநிமர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல்
    ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம்
    கடிமரந் தடித லோம்புநின்
    நெடுநல் யானைக் கந்தாற் றாவே

    காரிக்கண்ணனார்

  • நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்

    புறநானூறு

    நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்
    ஓம்பாது கடந்தட்டு அவர்
    முடி புனைந்த பசும் பொன்னின்
    அடி பொலியக் கழல் தைஇய
    வல் லாளனை வய வேந்தே
    யாமே நின் இகழ் பாடுவோர் எருத்தடங்கப்
    புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற
    இன்றுகண் டாங்குக் காண்குவம் என்றும்
    இன்சொல் எண்பதத்தை ஆகுமதி பெரும
    ஒருபிடி படியுஞ் சீறிடம்
    எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே

    ஆவூர் மூலங்கிழார்

  • ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை

    புறநானூறு

    ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை
    மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்
    கடல்வளர் புரிவளை புரையு மேனி
    அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்
    மண்ணுறு திருமணி புரையு மேனி
    விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்
    மணிமயி லுயரிய மாறா வென்றிப்
    பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென
    ஞாலங் காக்குங் கால முன்பிற்
    றோலா நல்லிசை நால்வ ருள்ளும்
    கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்
    வலியொத் தீயே வாலி யோனைப்
    புகழொத் தீயே முன்னியது முடித்தலின்
    முருகொத் தீயே முன்னியது முடித்தலின்
    ஆங்காங் கவரவ ரொத்தலின் யாங்கும்
    அரியவு முளவோ நினக்கே யதனால்
    இரவலர்க் கருங்கல மருகா தீயா
    யவனர் நன்கலந் தந்த தண்கமழ் தேறல்
    பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்
    ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்
    தாங்கினி தொழுகுமதி யோங்குவாண் மாற
    அங்கண் விசும்பி னாரிரு ளகற்றும்
    வெங்கதிர்ச் செல்வன் போலவுங் குடதிசைத்
    தண்கதிர் மதியம் போலவும்
    நின்று நிலைஇய ருலகமோ டுடனே

    நக்கீரனார்

  • புறவின் அல்லல் சொல்லிய கறையடி

    புறநானூறு

    புறவின் அல்லல் சொல்லிய கறையடி
    யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
    கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக
    ஈதல்நின் புகழும் அன்றே சார்தல்
    ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
    தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்
    அடுதல்நின் புகழும் அன்றே கெடுவின்று
    மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து
    அறம்நின்று நிலையிற் றாகலின் அதனால்
    முறைமைநின் புகழும் அன்றே மறம்மிக்கு
    எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்
    கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ
    யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய
    வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்டு
    இமையம் சூட்டியஏம விற்பொறி
    மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய
    வாடா வஞ்சி வாட்டும்நின்
    பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே

    மாறோக்கத்து நப்பசலையார்

  • எங்கோ னிருந்த கம்பலை மூதூர்

    புறநானூறு

    எங்கோ னிருந்த கம்பலை மூதூர்
    உடையோர் போல விடையின்று குறுகிச்
    செம்ம னாளவை யண்ணாந்து புகுதல்
    எம்மன வாழ்க்கை யிரவலர்க் கெளிதே
    5இரவலர்க் கெண்மை யல்லது புரவெதிர்ந்து
    வான நாண வரையாது சென்றோர்க்
    கானா தீயுங் கவிகை வண்மைக்
    கடுமான் கோதை துப்பெதிர்ந் தெழுந்த
    நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்
    பாசிலைத் தொடுத்த வுவலைக் கண்ணி
    மாசு ணுடுக்கை மடிவா யிடையன்
    சிறுதலை யாயமொடு குறுகல் செல்லாப்
    புலிதுஞ்சு வியன்புலத் தற்றே
    வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே

    மதுரைக்குமரன்

  • முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்

    புறநானூறு

    முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்
    கதிர்விடு மணியிற் கண்பொரு மாடத்
    திலங்குவளை மகளிர் தெற்றி யாடும்
    விளங்குசீர் விளங்கில் விழுமங் கொன்ற
    களங்கொள் யானைக் கடுமான் பொறைய
    விரிப்பி னகலுந் தொகுப்பி னெஞ்சும்
    மம்மர் நெஞ்சத் தெம்மனோர்க் கொருதலை
    கைம்முற் றலநின் புகழே யென்றும்
    ஒளியோர் பிறந்தவிம் மலர்தலை யுலகத்து
    வாழே மென்றலு மரிதே தாழாது
    செறுத்த செய்யுட் செய்செந் நாவின்
    வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
    இன்றுள னாயி னன்றும னென்றநின்
    ஆடுகொள் வரிசைக் கொப்பப்
    பாடுவன் மன்னாற் பகைவரைக் கடப்பே

    பொருந்திலிளங்கீரனார்

  • கையது கடன் நிறை யாழே மெய்யது

    புறநானூறு

    கையது கடன் நிறை யாழே மெய்யது
    புரவலர் இன்மையின் பசியே அரையது
    வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
    ஓம்பி உடுத்த உயவற் பாண
    பூட்கை இல்லோன் யாக்கை போலப்
    பெரும்புல் என்ற இரும் பேர் ஒக்கலை
    வையகம் முழுவதுடன் வளைப் பையென
    என்னை வினவுதி ஆயின் மன்னர்
    அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறைக்
    குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப்
    புலாக் களம் செய்த கலாஅத் தானையன்
    பிறங்கு நிலை மாடத்து உறந்தை யோனே
    பொருநர்க்கு ஓங்கிய வேலன் ஒரு நிலைப்
    பகைப் புலம் படர்தலும் உரியன் தகைத் தார்
    ஒள்ளெரி புரையும் உருகெழு புசும்பூண்
    கிள்ளி வளவற் படர்குவை ஆயின்
    நெடுங் கடை நிற்றலும் இலையே கடும் பகல்
    தேர்வீசு இருக்கை ஆர நோக்கி
    நீ அவற் கண்ட பின்றைப் பூவின்
    ஆடுவண்டு இமிராத் தாமரை
    சூடாய் ஆதல் அதனினும் இலையே

    ஆலந்தூர் கிழார்