கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்

புறநானூறு

கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்
குடுமி களைந்து நுதல்வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி
நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல் வாழ்க அவன் கண்ணி தார்பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே பால்விட்டு
அயினியும் இன்று அயின்றனனே வயின் வயின்
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை
அழுந்தப்பற்றி அகல்விசும்பு ஆர்ப்புஎழக்
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே

இடைக்குன்றூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

Next Post

வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்

Related Posts

கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்

புறநானூறு கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோவண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுக எனமாட மதுரையும் தருகுவன்…
Read More

வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

புறநானூறு வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்நீர்நிலை…
Read More

ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை

புறநானூறு ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடைமாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்கடல்வளர் புரிவளை புரையு மேனிஅடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்மண்ணுறு திருமணி புரையு மேனிவிண்ணுயர் புட்கொடி…
Read More