முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்

புறநானூறு

முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்
கதிர்விடு மணியிற் கண்பொரு மாடத்
திலங்குவளை மகளிர் தெற்றி யாடும்
விளங்குசீர் விளங்கில் விழுமங் கொன்ற
களங்கொள் யானைக் கடுமான் பொறைய
விரிப்பி னகலுந் தொகுப்பி னெஞ்சும்
மம்மர் நெஞ்சத் தெம்மனோர்க் கொருதலை
கைம்முற் றலநின் புகழே யென்றும்
ஒளியோர் பிறந்தவிம் மலர்தலை யுலகத்து
வாழே மென்றலு மரிதே தாழாது
செறுத்த செய்யுட் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுள னாயி னன்றும னென்றநின்
ஆடுகொள் வரிசைக் கொப்பப்
பாடுவன் மன்னாற் பகைவரைக் கடப்பே

பொருந்திலிளங்கீரனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ

Next Post

எங்கோ னிருந்த கம்பலை மூதூர்

Related Posts

கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்

புறநானூறு கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்களிற்று முக வரியின் தெறுழ்வீ பூப்பச்செம் புற்று ஈயலின் இன்அளைப் புளித்துமெந்தினை யாணர்த்து நந்துங் கொல்லோநிழலில்…
Read More

பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே

புறநானூறு பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னேஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனேஅறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னேதிறவோர் புகழ்ந்த தின்நண் பினனேமகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்துதுகளறு கேள்வி…
Read More

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்

புறநானூறு கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்வெள்வாய்க் கழுதைப் புல்லினப் பூட்டிப்பாழ்செய் தனை அவர் நனந்தலை நல்லெயில்புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்தேர்வழங்…
Read More