Tag: புறம்

  • முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்

    புறநானூறு

    முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்
    கதிர்விடு மணியிற் கண்பொரு மாடத்
    திலங்குவளை மகளிர் தெற்றி யாடும்
    விளங்குசீர் விளங்கில் விழுமங் கொன்ற
    களங்கொள் யானைக் கடுமான் பொறைய
    விரிப்பி னகலுந் தொகுப்பி னெஞ்சும்
    மம்மர் நெஞ்சத் தெம்மனோர்க் கொருதலை
    கைம்முற் றலநின் புகழே யென்றும்
    ஒளியோர் பிறந்தவிம் மலர்தலை யுலகத்து
    வாழே மென்றலு மரிதே தாழாது
    செறுத்த செய்யுட் செய்செந் நாவின்
    வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
    இன்றுள னாயி னன்றும னென்றநின்
    ஆடுகொள் வரிசைக் கொப்பப்
    பாடுவன் மன்னாற் பகைவரைக் கடப்பே

    பொருந்திலிளங்கீரனார்

  • அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ

    புறநானூறு

    அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ
    முணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல்
    ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத்
    தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்கு
    வடபுல மன்னர் வாட வடல்குறித்
    தின்னா வெம்போ ரியறேர் வழுதி
    இதுநீ கண்ணிய தாயி னிருநிலத்
    தியார்கொ லளியர் தாமே யூர்தொறும்
    மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி
    வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
    பெருநல் யாணரி னொரீஇ யினியே
    கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப்
    பலிகண் மாறிய பாழ்படு பொதியில்
    நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
    வல்லி னல்லக நிறையப் பல்பொறிக்
    கான வாரண மீனும்
    காடாகி விளியு நாடுடை யோரே

    மருதினிள நாகனார்

  • நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்

    புறநானூறு

    நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்
    மன்னுயிர் நிழற்று நிழலு மில்லை
    வளிமிகின் வலியு மில்லை யொளிமிக்
    கவற்றோ ரன்ன சினப்போர் வழுதி
    தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் போரெதிர்ந்து
    கொண்டி வேண்டுவ னாயிற் கொள்கெனக்
    கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே
    அளியரோ வளியரவ னிளியிழந் தோரே
    நுண்பல சிதலை யரிதுமுயன் றெடுத்த
    செம்புற் றீயல் போல
    ஒருபகல் வாழ்க்கைக் குலமரு வோரே

    ஐயூர் முடவனார்

  • மாசற விசித்த வார்புஉறு வள்பின்

    புறநானூறு

    மாசற விசித்த வார்புஉறு வள்பின்
    மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
    ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்
    பொலங்குழை உழிஞையடு பொலியச் சூட்டிக்
    குருதி வேட்கை உருகெழு முரசம்
    மண்ணி வாரா அளவை எண்ணெய்
    நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
    அறியாது ஏறிய என்னைத் தெறுவர
    இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
    அதூஉம் சாலும் நற் றமிழ்முழுது அறிதல்
    அதனொடும் அமையாது அணுக வந்து நின்
    மதனுடை முழவுத்தோள் ஓச்சித் தண்ணென
    வீசி யோயே வியலிடம் கமழ
    இவன்இசை உடையோர்க்கு அல்லது அவணது
    உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
    விளங்கக் கேட்ட மாறுகொல்
    வலம்படு குருசில் நீ ஈங்குஇது செயலே

    மோசிகீரனார்

  • நாடன் என்கோ ஊரன் என்கோ

    புறநானூறு

    நாடன் என்கோ ஊரன் என்கோ
    பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ
    யாங்கனம் மொழிகோ ஓங்குவாள் கோதையை
    புனவர் தட்டை புடைப்பின் அயலது
    இறங்குகதிர் அலமரு கழனியும்
    பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமே

    பொய்கையார்

  • கோதை மார்பிற் கோதை யானும்

    புறநானூறு

    கோதை மார்பிற் கோதை யானும்
    கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
    மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
    கள்நா றும்மே கானல்அம் தொண்டி
    அஃதுஎம் ஊரே அவன்எம் இறைவன்
    எம்மும் உள்ளுமோ முதுவாய் இரவல
    அமர்மேம் படூஉங் காலை நின்
    புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே

    பொய்கையார்

  • வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி

    புறநானூறு

    வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி
    நெடிய என்னாது சுரம்பல கடந்து
    வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
    பெற்றது மகழ்ந்தும் சுற்றம் அருத்தி
    ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
    வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை
    பிறர்க்குத் தீதறிந் தன்றோ இன்றே திறம்பட
    நண்ணார் நாண அண்ணாந்து ஏகி
    ஆங்குஇனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ்
    மண்ணாள் செல்வம் எய்திய
    நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே

    கோவூர் கிழார்

  • நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்

    புறநானூறு

    நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
    இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
    இவரே புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்
    தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்
    களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
    புன்றலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி
    விருந்திற் புன்கண்நோ வுடையர்
    கெட்டனை யாயின் நீ வேட்டது செய்ம்மே

    கோவூர் கிழார்

  • இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்

    புறநானூறு

    இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்
    கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
    நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே நின்னொடு
    பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே
    ஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே
    இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால்
    குடிப்பொருள் அன்று நும் செய்தி கொடித்தேர்
    நும்மோர் அன்ன வேந்தர்க்கு
    மெய்ம்மலி உவகை செய்யும் இவ் இகலே

    கோவூர் கிழார்

  • கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்

    புறநானூறு

    கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்
    குடுமி களைந்து நுதல்வேம்பின் ஒண்தளிர்
    நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து
    குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி
    நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
    யார்கொல் வாழ்க அவன் கண்ணி தார்பூண்டு
    தாலி களைந்தன்றும் இலனே பால்விட்டு
    அயினியும் இன்று அயின்றனனே வயின் வயின்
    உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
    வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை
    அழுந்தப்பற்றி அகல்விசும்பு ஆர்ப்புஎழக்
    கவிழ்ந்து நிலம் சேர அட்டதை
    மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே

    இடைக்குன்றூர் கிழார்