புறநானூறு
நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்
ஓம்பாது கடந்தட்டு அவர்
முடி புனைந்த பசும் பொன்னின்
அடி பொலியக் கழல் தைஇய
வல் லாளனை வய வேந்தே
யாமே நின் இகழ் பாடுவோர் எருத்தடங்கப்
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற
இன்றுகண் டாங்குக் காண்குவம் என்றும்
இன்சொல் எண்பதத்தை ஆகுமதி பெரும
ஒருபிடி படியுஞ் சீறிடம்
எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே
ஆவூர் மூலங்கிழார்