காலனும் காலம் பார்க்கும் பாராது

புறநானூறு

காலனும் காலம் பார்க்கும் பாராது
வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய
வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே
திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்
பெருமரத்து இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்
வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும்
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்
எயிறுநிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும்
களிறுமேல் கொள்ளவும் காழகம் நீப்பவும்
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்
கனவின் அரியன காணா நனவின்
செருச்செய் முன்ப நின் வருதிறன் நோக்கி
மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்
புதல்வர் பூங்கண் முத்தி மனையோட்கு
எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களடு
பெருங்கலக் குற்றன்றால் தானே காற்றோடு
எரிநிகழ்ந் தன்ன செலவின்
செருமிகு வளவ நிற் சினைஇயோர் நாடே

கோவூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்

Next Post

ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்

Related Posts

தூங்கு கையான் ஓங்கு நடைய

புறநானூறு தூங்கு கையான் ஓங்கு நடையஉறழ் மணியான் உயர் மருப்பினபிறை நுதலான் செறல் நோக்கினபா வடியால் பணை எருத்தினதேன் சிதைந்த வரை போலமிஞிறு ஆர்க்கும்…
Read More

ஆரந் தாழ்ந்த வணிகிளர் மார்பிற்

புறநானூறு ஆரந் தாழ்ந்த வணிகிளர் மார்பிற்றாடோய் தடக்கைத் தகைமாண் வழுதிவல்லை மன்ற நீநயந் தளித்தல்தேற்றாய் பெரும பொய்யே யென்றும்காய்சினந் தவிராது கடலூர் பெழுதரும்ஞாயி றனையைநின்…
Read More

வருதார் தாங்கி அமர்மிகல் யாவது

புறநானூறு வருதார் தாங்கி அமர்மிகல் யாவதுபொருது ஆண்டொழிந்த மைந்தர் புண்தொட்டுக்குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டிநிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப்பருந்து அருந்துற்ற…
Read More