Author: Pulan

  • வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி

    புறநானூறு

    வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி
    நெடிய என்னாது சுரம்பல கடந்து
    வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
    பெற்றது மகழ்ந்தும் சுற்றம் அருத்தி
    ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
    வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை
    பிறர்க்குத் தீதறிந் தன்றோ இன்றே திறம்பட
    நண்ணார் நாண அண்ணாந்து ஏகி
    ஆங்குஇனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ்
    மண்ணாள் செல்வம் எய்திய
    நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே

    கோவூர் கிழார்

  • நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்

    புறநானூறு

    நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
    இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
    இவரே புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்
    தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்
    களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
    புன்றலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி
    விருந்திற் புன்கண்நோ வுடையர்
    கெட்டனை யாயின் நீ வேட்டது செய்ம்மே

    கோவூர் கிழார்

  • இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்

    புறநானூறு

    இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்
    கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
    நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே நின்னொடு
    பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே
    ஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே
    இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால்
    குடிப்பொருள் அன்று நும் செய்தி கொடித்தேர்
    நும்மோர் அன்ன வேந்தர்க்கு
    மெய்ம்மலி உவகை செய்யும் இவ் இகலே

    கோவூர் கிழார்

  • இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா

    புறநானூறு

    இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா
    நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
    திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி
    நிலமிசைப் புரளும் கைய வெய்துயிர்த்து
    அலமரல் யானை உருமென முழங்கவும்
    பாலில் குழவி அலறவும் மகளிர்
    பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில்
    வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்
    இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்
    துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்
    அறவை யாயின் நினது எனத் திறத்தல்
    மறவை யாயின் போரொடு திறத்தல்
    அறவையும் மறவையும் அல்லை யாகத்
    திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
    நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
    நாணுத்தக வுடைத்திது காணுங் காலே

    கோவூர் கிழார்

  • நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்

    புறநானூறு

    நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
    தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
    கால்உண வாகச் சுடரொடு கொட்கும்
    அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்
    கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத்
    தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
    தபுதி யஞ்சிச் சீரை புக்க
    வரையா ஈகை உரவோன் மருக
    நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
    தேர்வண் கிள்ளி தம்பி வார் கோல்
    கொடுமர மறவர் பெரும கடுமான்
    கைவண் தோன்றல் ஐயம் உடையேன்
    ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
    பார்ப்பார் நோவன செய்யலர் மற்றுஇது
    நீர்த்தோ நினக்கு என வெறுப்பக் கூறி
    நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்
    நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே
    தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்
    இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும் எனக்
    காண்டகு மொய்ம்ப காட்டினை ஆகலின்
    யானே பிழைத்தனென் சிறக்கநின் ஆயுள்
    மிக்குவரும் இன்னீர்க் காவிரி
    எக்கர் இட்ட மணலினும் பலவே

    தாமப்பல் கண்ணனார்

  • ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்

    புறநானூறு

    ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்
    யானையும் மலையின் தோன்றும் பெரும நின்
    தானையும் கடலென முழங்கும் கூர்நுனை
    வேலும் மின்னின் விளங்கும் உலகத்து
    அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின்
    புரைதீர்ந் தன்று அது புதுவதோ அன்றே
    தண்புனற் பூசல் அல்லது நொந்து
    களைக வாழி வளவ என்று நின்
    முனைதரு பூசல் கனவினும் அறியாது
    புலிபுறங் காக்கும் குருளை போல
    மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்
    பெருவிறல் யாணர்த் தாகி அரிநர்
    கீழ்மடைக் கொண்ட வாளையும் உழவர்
    படைமிளிர்ந் திட்ட யாமையும் அறைநர்
    கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை
    நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
    வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும்
    மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந
    மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி
    நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
    புலவ ரெல்லாம் நின்நோக் கினரே
    நீயே மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
    கூற்றுவெகுண் டன்ன முன்பொடு
    மாற்றுஇரு வேந்தர் மண்நோக் கினையே

    இடைக்காடனார்

  • காலனும் காலம் பார்க்கும் பாராது

    புறநானூறு

    காலனும் காலம் பார்க்கும் பாராது
    வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய
    வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே
    திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்
    பெருமரத்து இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்
    வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும்
    அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்
    எயிறுநிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும்
    களிறுமேல் கொள்ளவும் காழகம் நீப்பவும்
    வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்
    கனவின் அரியன காணா நனவின்
    செருச்செய் முன்ப நின் வருதிறன் நோக்கி
    மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்
    புதல்வர் பூங்கண் முத்தி மனையோட்கு
    எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களடு
    பெருங்கலக் குற்றன்றால் தானே காற்றோடு
    எரிநிகழ்ந் தன்ன செலவின்
    செருமிகு வளவ நிற் சினைஇயோர் நாடே

    கோவூர் கிழார்

  • நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்

    புறநானூறு

    நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்
    ஓம்பாது கடந்தட்டு அவர்
    முடி புனைந்த பசும் பொன்னின்
    அடி பொலியக் கழல் தைஇய
    வல் லாளனை வய வேந்தே
    யாமே நின் இகழ் பாடுவோர் எருத்தடங்கப்
    புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற
    இன்றுகண் டாங்குக் காண்குவம் என்றும்
    இன்சொல் எண்பதத்தை ஆகுமதி பெரும
    ஒருபிடி படியுஞ் சீறிடம்
    எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே

    ஆவூர் மூலங்கிழார்

  • புறவின் அல்லல் சொல்லிய கறையடி

    புறநானூறு

    புறவின் அல்லல் சொல்லிய கறையடி
    யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
    கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக
    ஈதல்நின் புகழும் அன்றே சார்தல்
    ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
    தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்
    அடுதல்நின் புகழும் அன்றே கெடுவின்று
    மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து
    அறம்நின்று நிலையிற் றாகலின் அதனால்
    முறைமைநின் புகழும் அன்றே மறம்மிக்கு
    எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்
    கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ
    யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய
    வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்டு
    இமையம் சூட்டியஏம விற்பொறி
    மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய
    வாடா வஞ்சி வாட்டும்நின்
    பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே

    மாறோக்கத்து நப்பசலையார்

  • எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி

    புறநானூறு

    எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி
    விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே
    விறற் புகழ் மாண்ட புரவி எல்லாம்
    மறத் தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே
    தேர்தர வந்த சான்றோர் எல்லாம்
    தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே
    விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம்
    பொறுக்குநர் இன்மையின் இருந்துவிளிந் தனவே
    சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென
    வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் இனியே
    என்னா வதுகொல் தானே கழனி
    ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
    பாசவல் முக்கித் தண்புனல் பாயும்
    யாணர் அறாஅ வைப்பின்
    காமர் கிடக்கை அவர் அகன்றலை நாடே

    பரணர்