வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்

புறநானூறு

வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்
அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து
அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன
மலைப்பரும் அகலம் மதியார் சிலைத்தெழுந்து
விழுமியம் பெரியம் யாமே நம்மிற்
பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்திற் பெயர
ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான் ஆண்டுஅவர்
மாண்இழை மகளிர் நாணினர் கழியத்
தந்தை தம்மூர் ஆங்கண்
தெண்கிணை கறங்கச்சென்று ஆண்டு அட்டனனே

இடைக்குன்றூர் கிழார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *