புறநானூறு
உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடைமல்கு குளவியடு கமழும் சாரல்
மறப்புலி உடலின் மான்கணம் உளவோ
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ ஞாயிறு சினவின்
அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய
விரிமணல் ஞெமரக் கல்பக நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ
எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை
வழுவில் வன்கை மழவர் பெரும
இருநில மண் கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ நீ களம் புகினே
ஔவையார்
Leave a Reply Cancel reply