ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்

புறநானூறு

ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்
தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் எனச்
சுரன்முதல் இருந்த சில்வளை விறலி
செல்வை யாயின் சேணோன் அல்லன்
முனைசுட வெழுந்த மங்குல் மாப்புகை
மலைசூழ் மஞ்சின் மழ களிறு அணியும்
பகைப்புலத் தோனே பல் வேல் அஞ்சி
பொழுது இடைப் படாஅப் புலரா மண்டை
மெழுகுமெல் அடையிற் கொழுநிணம் பெருப்ப
வறத்தற் காலை யாயினும்
புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

எருதே இளைய நுகம் உணராவே

Next Post

போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை

Related Posts

யாண்டுபல வாக நரையில ஆகுதல்

புறநானூறு யாண்டுபல வாக நரையில ஆகுதல்யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்மாண்டஎன் மனைவியோடு மக்களும் நிரம்பினர்யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும்அல்லவை செய்யான் காக்க அதன்தலைஆன்றுஅவிந்து…
Read More

முனைத் தெவ்வர் முரண் அவியப்

புறநானூறு முனைத் தெவ்வர் முரண் அவியப்பொர்க் குறுகிய நுதி மருப்பின் நின்இனக் களிறு செலக் கண்டவர்மதிற் கதவம் எழுச் செல்லவும்பிணன் அழுங்கக் களன் உழக்கிச்செலவு…
Read More
Exit mobile version