ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்

புறநானூறு

ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்
பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ
அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் தது அது பொய்யா காதே
அருந்தே மாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

கையது வேலே காலன புழல்

Next Post

எருதே இளைய நுகம் உணராவே

Related Posts

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்

புறநானூறு கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்வெள்வாய்க் கழுதைப் புல்லினப் பூட்டிப்பாழ்செய் தனை அவர் நனந்தலை நல்லெயில்புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்தேர்வழங்…
Read More

கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்

புறநானூறு கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோவண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுக எனமாட மதுரையும் தருகுவன்…
Read More

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

புறநானூறு இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்துகடியுடை வியன்நக ரவ்வே அவ்வேபகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்துகொல்துறைக் குற்றில மாதோ…
Read More