மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து

புறநானூறு

மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து
என்னொடு பொருந்தும் என்ப அவரை
ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
அவர்ப்புறம் காணேன் ஆயின் – சிறந்த
பேரமர் உண்கண் இவளினும் பிரிக
அறன்நிலை திரிய அன்பின் அவையத்துத்
திறன்இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக மலி புகழ்
வையை சூழ்ந்த வலங்கெழு வைப்பின்
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனும் மன்எயில் ஆந்தையும் உரைசால்
அந்துவஞ் சாத்தனும் ஆதன் அழிசியும்
வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும்
கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த
இன்களி மகிழ்நகை இழுக்கிய யான் ஒன்றோ
மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஒரிஇப் பிறர்
வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே

பூதப்பாண்டியன்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *