ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புறநானூறு

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று இவ் உலகத்து இயற்கை
இன்றின் ஊங்கோ கேளலம் திரளரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
ஒலியல் மாலையடு பொலியச் சூடிப்
பாடின் தெண்கிணை கறங்கக் காண்தக
நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடிப்
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே

இடைக்குன்றூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்

Next Post

கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்

Related Posts

மண் திணிந்த நிலனும்

புறநானூறு மண் திணிந்த நிலனும்நிலம் ஏந்திய விசும்பும்விசும்பு தைவரு வளியும்வளித் தலைஇய தீயும்தீ முரணிய நீரும் என்றாங்குஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது…
Read More

ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்

புறநானூறு ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோஅணிபூண் அணிந்த யானை இயல்தேர்அதியமான் பரிசில் பெறூஉங் காலம்நீட்டினும் நீட்டா…
Read More

ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்

புறநானூறு ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்யானையும் மலையின் தோன்றும் பெரும நின்தானையும் கடலென முழங்கும் கூர்நுனைவேலும் மின்னின் விளங்கும் உலகத்துஅரைசுதலை பனிக்கும்…
Read More