புறநானூறு
கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ
வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுக என
மாட மதுரையும் தருகுவன் எல்லாம்
பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள்
தொன்னிலக் கிழமை சுட்டின் நன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரூஉத்திரள் போல அவன்
கொண்ட குடுமித்தும் இத் தண்பணை நாடே
கோவூர்கிழார்
Leave a Reply Cancel reply