கான் உறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்

புறநானூறு

கான் உறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் புன்னாட்டுள்ளும்
ஏழெயில் கதவம் எறிந்து கைக்கொண்டு நின்
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை
பாடுநர் வஞ்சி பாடப் படையோர்
தாதுஎரு மறுகின் பாசறை பொலியப்
புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பான்கடும்பு அருத்தும்
செம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை
வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்
காம இருவர் அல்லது யாமத்துத்
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்
ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி
வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப
நீஆங்குக் கொண்ட விழவினும் பலவே

கோவூர்கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்

Next Post

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்

Related Posts
புறநானூறு Purananooru

யாதும் ஊரே யாவரும் கேளிர்

புறநானூறு யாதும் ஊரே யாவரும் கேளிர்தீதும் நன்றும் பிறர்தர வாராநோதலும் தணிதலும் அவற்றோ ரன்னசாதலும் புதுவ தன்றே வாழ்தல்இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்இன்னாது என்றலும்…
Read More

நுங்கோ யார் வினவின் எங்கோக்

புறநானூறு நுங்கோ யார் வினவின் எங்கோக்களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்யாமைப் புழுக்கின் காமம் வீடஆராஆரற் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅவைகுதொழின் மடியும் மடியா விழவின்யாணர் நல்நாட்…
Read More

உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்

புறநானூறு உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாதுசில்செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்துஈங்குஎவன் செய்தியோ பாண பூண்சுமந்துஅம் பகட்டு…
Read More