இவன் யார் என்குவை ஆயின் இவனே

புறநானூறு

இவன் யார் என்குவை ஆயின் இவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்
மறலி அன்ன களிற்றுமிசை யோனே
களிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்
சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோர் அறியாது மைந்துபட் டன்றே
நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழுமீன் விளைந்த கள்ளின்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *